Skip to main content

Posts

மோனோலிசாவை விட அழகானவள் எங்கள்...!!

இன்றைக்குச் சரியாக நூறாண்டுக்கு முன்பு, 1905 ஜனவரி 1ஆம் தேதியன்று, விழுப்புரத்தையடுத்தப் பனைமலை கிராமத்துக்கு வந்த பிரெஞ்சுப் பேராசிரியரும், சென்னை தொல்லியல்துறை அதிகாரியு மான ழுவோ துப்ராய் அவர்கள், அங்குள்ளக் குன்றின் மீது ஏறி நின்று பார்க்கிறார். வியந்து போகிறார். அங்கிருக்கும் சிவாலயம், காஞ்சி கைலாசநாதர் கோயிலை ஒத்திருக் கிறது. ஏற்கனவே, 1890இல் பனைமலைக் கோயிலின் சமஸ்கிருதக் கல்வெட்டுகளைப் படித்த, ஆய்வறிஞர் ஹுல்ஷ், சில ஐயங்களை எழுப்பியிருந்தார். இப்போது அவற்றிற்கு விடை கண்டார் ழுவோ துப்ராய். காஞ்சி கைலாசநாதர் கோயிலைக் கட்டிய பல்லவ மன்னன் இராஜ சிம்மன்தான், பனைமலைக் கோயிலையும் கட்டியிருக்கிறான். பிரெஞ்சுப் பேராசிரியரின் ஆய்வு, பனைமலை தாளகிரீசுவரர்க் கோயிலையும், அங்குள்ள ஓவியத்தையும் வெளியுலகுக்குக் கொண்டு வந்தது. பனைமலைக் கோயிலின் வடக்கு சிற்றாலயத்தில், இடம்பெற்றுள்ள ஓவியம் அழகானது. மகுடம் தரித்தத் தலைக்கு மேல் வண்ணக் குடை, ஒரு கால் தரையில் ஊன்றியிருக்க மற்றொரு காலை மடித்து தலையை சாய்த்து, அழகிய அணிகலன் களுடன் காட்சித் தருகிறாள் உமையம்மை.  (இவ்வோவியம் பல்லவனின்
Recent posts

இந்தியா முழுதும் தமிழர் நாடே - I

ஒரு காலத்தே தமிழகம் 'நாவலந் தீவு' என்றழைக்கப் பட்டது. தமிழ் இலக்கியத்தில் நாவலந்தீவு என்ற பெயர் காணப்படுகிறது. வடமொழியிலும் நாவலந்தீவு என்ற சொல் வருகிறது. “நாவலந்தீ வாள்வாரே நன்கு” - (ஏலாதி, 56). கண்டப் பெயர்ச்சி, கண்ட நகர்வு கோட்பாடு ! காண்க கீழ்காணும் இணையத்திலுள்ள விளக்கங்களை https://pubs.usgs.gov/gip/dynamic/himalaya.html

உலகையே கட்டியாண்ட தமிழர்கள்..! : விஞ்ஞானிகளே வியந்து போன ஆச்சர்யம்..!

தமிழ் மொழி, பண்பாடு,கலாசாரம் என்பது இன்றுவரை ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியது என்றுதான் பலராலும் நம்பப்படுகிறது.ஆனால் நாமெல்லாம் அறியாத நம் தமிழ் மொழி தோன்றி இருபதாயிரம் ஆண்டுகள் என்றால் நம்ப முடிகிறதா?. ஆம், தமிழினம் உலகிலேயே மிகவும் பழமையான இனம், உலக மொழிகளில் மிகவும் பழமையான மொழி தமிழ் மொழி.உலக மொழிகளை ஆராய்ந்தால் அவற்றில் தமிழ் சொற்களும், பெயர்களும் வெவ்வேறு வடிவில் இருக்கிறன என்ற ஆராய்ச்சியாளர்களின் கருத்துக்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. இதற்கான ஆதாரம், நம் தமிழும்,தமிழ் பாரம்பரியமும் தோன்னிய குமரிக்கண்டம் இன்றிலிருந்து இருபதாயிரம் ஆண்டுகளுக்க முன்னர் தமிழனின் பிறப்பிடமும், தமிழனின் பாரம்பரியமும் குமரிக்கண்டம்தான். அக்கண்டம் நீரில் மூழ்கிப் போனது அன்றே நம் தமிழ் மேதைகளினால் கண்டறியப்பட்டு பெயர் சூட்டப்பட்ட கடல் கோளினால் இக்கண்டம் அழிந்து போனது. முச்சங்க வரலாற்றிலும்,சிலப்பதிகார உரைகள்,தேவநாயேப் பாவனார் எழுதிய முதற் தாய் மொழி வாயிலாகவும் நம்மால் அறிந்து கொள்ள முடியும். தமிழன் தோன்றிய குமரிக்கண்டம் கையாண்ட மொழி தமிழ்.பல்லாயிரம் ஆண்டுகளுக்கு பின் படிப்

ராஜேந்திர சோழரின் வங்கதேச படையெடுப்பு: லண்டன் நூலகத்தின் ஒளிப்பட ஆவணத்தில் தகவல்

முதலாம் ராஜேந்திர சோழரின் வங்காள படையெடுப்பின்போது கோதாவரி ஆற்றின் தென்கரை யோடு திரும்பிவிட்டான் என்பதே இதுநாள் வரை வரலாற்று ஆய் வாளர்களின் கூற்று. ஆனால், வட கரைக்கும் சென்று போரிட்டான் என்பதற்கான ஆவணம் தற்போது லண்டனில் உள்ள பிரிட்டிஷ் நூலகத்தில் கிடைத்திருக்கிறது. கங்கைகொண்ட சோழரின், கங்கைகொண்ட சோழீச்சரம், கங்கைகொண்ட சோழபுரம் இவைகள் குறித்து முழுமையான ஆய்வு நூல் ஒன்றை எழுதி முடித்திருக் கிறார் வரலாற்று ஆய்வாளர் குடவாயில் பாலசுப்ரமணியன். இதற்காக மலேசியா, இலங்கை, இந்தோனேசியா, கம்போடியா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக் குச் சென்றவருக்கு, லண்டனில் உள்ள பிரிட்டிஷ் நூலகத்தில் 2 அரிய ஒளிப்படங்கள் கிடைத்தன. ராஜேந்திரனின் படைகள் வங்கப் போரை வெற்றிகரமாக முடித்துவிட்டு, அதன் அடையாள மாக கங்கை நீரை எடுத்துக்கொண்டு கோதாவரி நதிக்கரைக்கு வந்தன. தனது படைகளை அங்கிருந்து வரவேற்ற ராஜேந்திரன், அவர்களை அழைத்துக்கொண்டு தற்போது ஒடிசா என்று அழைக்கப்படும் ‘ஒட்டர தேயம்’ மீது படையெடுத்து அங்கிருந்த மன்னர்களையும் வீழ்த்தினான். இதனை ஒடிசா மாநிலம் மகேந் திரகிரி மலை மீது அமைந்துள்ள யுதிஷ்டிரர் மற்

நமது பரிணாம கொள்கை(Theory of evolution)

சார்லஸ் டார்வின் எனும் இங்கிலாந்து அறிஞர் 1931-36 வரை ஆய்ந்து வெளியிட்ட உயிர்கள் பற்றிய பரிணாம கொள்கையே இன்று நவீன (உயிரியல்) அறிவியலின் பிரதானமாக இருக்கிறது இதையே நாமும் மதிப்பெண்னிற்காக மணனம் செய்து தேரிவந்தோம்..! இதையேதான் நம்மவர்கள் ஆயிரம் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கதையாக சொல்லியும், பதிகம், பாட்டாக படித்தும் வைத்திருக்கிறார்கள் கண்டுகொண்டோமா நாம்? இந்த கலாச்சாரத்திலே கடவுளின் அவதாரங்களாக சொல்லப்பட்ட அனைத்தும் பரிணாம வளர்ச்சியின் படிமானங்களே...! "உருவாய் அருவாய் உளதாய் இலதாய்  மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்...! -எனும் அருணகிரியாரின் கந்தர் அநுபூதி-51 யும்... வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்... -எனும் திருவாசகமும்  கற்பனை என்று நவீனத்தை தலையில் தாங்கியாடும் நமக்கு யாரோ வந்து தலையில்குட்டி சொன்னால்தான் தெரிகிறது நம்மவர்களின் பெருமையே...  இதுதான் இந்த மெக்காலே கல்விமுறையின் உச்சபட்ச முட்டாள்தனம். இந்த புடைப்பு சிற்பம் எனது வானியல் வரலாற்று தேடலின் போது தமிழ்நாட்டின் கழுகுமலை வெட்டுவான் கோவிலின் ம

*தமிழின் நவீன சிறப்பு*❗

*1.* டிஜிட்டல் மொழியாக அறிமுகம் செய்யப்பட்ட முதல் இந்திய மொழி நம் தாய்மொழி தமிழ்மொழி. *2.* வேற்று கிரகங்களில் மனிதர்கள் வாழ்கிறார்களா என கண்டறிய அனுப்பட்ட விண்கலத்தில் அனுப்பியது தமிழை தான் இந்தியை அல்ல. *3.* சீனா வானொலியில் சைனிஷ்க்கு அப்புறம் தமிழில் வணக்கம் சொல்வது வழக்கம். *4.* ரஷ்யா நாடாளுமன்றத்தின் நான்கு வாயிலின் பெயர் நம் தமிழில் உள்ளது. *5.* உலகம் அழிந்துவிட்டால் அடுத்த தலைமுறை படிப்பதற்காக பாதுகாக்கப்படும் மொழி நூல்களில் திருக்குறள் உள்ளது. *6.* லண்டன் கேம்ப்ரிட்ஜில் தமிழ் மொழிக்கென தனி துறை வழங்கப்பட்டுள்ளது. *7.* ஆறு நாடுகளில் அங்கீகரிக்கப்பட்ட அலுவல் மொழி தமிழ். *8.* இந்தியாவிலேயே முதன்முதலில் பரிசுத்த வேதாகமம் (பைபிள்) மொழி பெயர்க்கப்பட்டது நமது தமிழ் மொழியில் தான். *9.* முதன் முதலில் நிலவுக்கு சென்ற நீல் ஆம்ஸ்ட்ராங் உட்பட்ட விண்வெளி வீரர்களுக்கு கற்பிக்கப்பட்ட மொழிகளில் தமிழும் ஓன்று. *10.* ஆங்கிலத்துக்கு பின் இனையதளங்களில் அதிக வெப்சைட் மற்றும் பக்கங்களை உடையது தமிழ் மட்டுமே. 🙏🏼 *தமிழ் வளர்ப்போம்.* 🙏🏼

தமிழ் மொழி

இறைவனோடும் இவ்விகத்தோடும் இணைந்து தோன்றிட்டு காலங்களை கடந்து வாழ்ந்திடும் பண்பட்ட பழமை மொழி அடர்காடுகளில் கரடுமலைகளில் அலைந்து திரிந்திட்ட முதல் மனிதன் இயற்கையோடு இணைந்து உறவாடி வடித்திட்ட இயற்கை மொழி சொல்யொன்றை உயிர் ஓவியமாய் யுகமதில் வாழும் காவியமாய் சிந்தனையை கடைந்து படைத்து தீட்டிட்ட தொன்மை மொழி தானே விதையுண்டு விருச்சகமாய் வேரோடி ஆலமரமாய் தழைத்திட்டு இலக்கண இலக்கியம் வளம் கொளுத்து செழுத்திட்ட செம்மொழி தெலுகு கன்னடம் துளு மலையாளம் என இருபத்தொன்பது புதுமொழி விழுதுகள் தன்னிலே ஈன்றெடுத்து பிறமொழி கலவாது உயர்தனி தமிழ் தாய்மை மொழி தமிழ் வேந்தர்களும் மாந்தர்களும் சங்கங்கள் நிறுவிட சான்றோர்கள் இயிற்றிட்ட வாழ்வியியல் நூற்களால் கல்வி சிறந்திட்ட நெறியியல் மொழி திருநூற்கள் குறளும் நாலடியும் சிலம்பும் தெய்வ புலவன் திருவள்ளுவரையும் தேன்கவி புலவன் கம்பனையும் வரமாக பெற்றிட்ட சிறப்பு மொழி தமிழகம் ஈழம் தன் தாயகத்தில் மலேயா சிங்கை மொரிசு பிஜு என புலம்பெயர்ந்த பன்னாட்டில் தலைநிமிர்ந்து புகழ்சேர் உலக மொழி கணிணியுகத்தில் தடம் பதித்து அறிவியியல் மொழியாய் பரிணாமித்து இணையத்திலும் புதுமை புரட்சி செய்