Skip to main content

தந்தை ராஜராஜனை மிஞ்சிய மகன் ராஜேந்திர சோழ பெரு வேந்தர்

தோல்வியே காணாத ஒரே தமிழ் மன்னன், பல நாடுகளை வென்றெடுத்த ஒரே இந்திய மன்னன், சோழ ராஜ்ஜியத்தை சொர்க்க பூமியாக மாற்றிய மாமன்னன் ராஜேந்திர சோழன்.


சோழ மன்னர்கள் சுமார் 300 ஆண்டுகள் தமிழகத்தை சிறப்பாக ஆட்சி புரிந்து வந்தனர். இதில் ராஜராஜ சோழன் தஞ்சையை தலைநகரமாக கொண்டு ஆட்சி செய்தார். அதன் பின்னர் அவரது மகன் ராஜேந்திர சோழன் கி.பி. 1014 ஆம் ஆண்டு மன்னராக முடி சூடி கொண்டார். மன்னரான பின்னர் புதிய தலைநகரை ஏற்படுத்தினார். கங்கை கொண்ட சோழபுரம் என்று அழைக்கப்பட்ட அந்த நகரிலிருந்தபடி பல வெற்றிகளைக் குவித்தார். சோழ ராஜ்ஜியத்தையும் வளம் கொழிக்கும் சொர்க்கபூமியாக மாற்றினார். 30 ஆண்டுகள் மகத்தான ஆட்சி புரிந்தார்.

தலைநகரை மாற்றியது ஏன்?
***************************
தஞ்சையைத் தலைநகராக் கொண்டு சோழ ராஜ்ஜியம் தழைத்தோங்கியிருந்த நிலையில் வடக்கிலிருந்து அதாவது தற்போதைய கர்நாடகம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து அடிக்கடி படையெடுப்புகள் நடந்தன. இதனால் தமிழகத்தின் மத்தியப் பகுதியில் தலைநகரை மாற்ற முடிவு செய்தே கங்கை கொண்ட சோழபுரத்தில் புதிய தலைநகரை ஏற்படுத்தினார் ராஜேந்திர சோழன்.

கங்கையை வென்ற சோழன்:
**************************
இவரது ஆட்சிகாலத்தில் தான் வட இந்தியாவில் கங்கை வரை படையெடுத்து வெற்றியும் பெற்றார். கங்கை வரை படையெடுத்து வெற்றி பெற்றதன் நினைவாக, தான் உருவாக்கிய தலைநகருக்கு கங்கை கொண்ட சோழபுரம் என்றும் பெயர் சூட்டினார். இந்த கங்கை கொண்ட சோழபுரம் தான் கி.பி. 11 ஆம் நூற்றாண்டுகளில் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கே தலைநகரமாகவும் விளங்கியது.

மிகப் பெரிய தலைநகரம்:
***********************
கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திரன் அமைத்த தலைநகரம் மிகப் பிரமாண்டமானதாக இருந்தது. எதிரிகள் அத்தனை சீக்கிரம் ஊடுறுவி விடாத அளவுக்கு பலத்த பாதுகாப்புடன் கூடிய கோட்டைச் சுவரைக் கட்டினார் ராஜேந்திரன். அருகிலேயே கொள்ளிடம் ஆறும் இருந்ததால் வளமைக்கும் குறைவில்லாமல் சொர்க்க பூமியாக திகழ்ந்ததாம் கங்கை கொண்ட சோழபுரம்.

மிகப்பெரிய சிவ ஆலயம்:
***********************
தன் தந்தை தஞ்சாவூரில் கட்டிய கோயிலைப்போல், கங்கைகொண்ட சோழபுரத்தில் பெரிய கோயில் கட்டி, லிங்கத்தையும் நந்தியையும் பெரிதாக பிரதிஷ்டை செய்தார். சிவனுக்கு பிரகதீஸ்வரர் என்றும், அம்மனுக்கு பெரியநாயகி என்றும் பெயர் சூட்டினான். கோயில் கும்பாபிஷேகத்திற்கு தன்னிடம் தோற்ற மன்னர்களை கங்கையிலிருந்து தண்ணீரை தலையில் சுமந்து கொண்டு வரச்செய்து அபிஷேகம் செய்தான்.

கோவிலின் கட்டுமானப்பணி:
*************************
4 ஏக்கர் பரப்பளவில் 160 அடி உயரமுள்ள பிரகதீஸ்வரர் ஆலயம் கலை நயத்துடன் எண்கோண வடிவில் அமைக்கப்பட்டுள்ள இந்த கோவிலின் கட்டுமானம் தற்கால பொறியாளர்களையே வியப்பில் ஆழ்த்தி வருகிறது. மேலும் தஞ்சைப் பெரிய கோவிலை விட இந்த கோவிலின் கட்டுமான நுனுக்கம்தான் மிகச் சிறப்பானது என்று கட்டடக் கலை வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

கடாரம் கொண்டான் ராஜேந்திரசோழன்:
***********************************
தனது பெரும் கடல் படையுடன் கடாரம் என்று அழைக்கப்பட்ட மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, மியான்மார், கம்போடியா, இந்தோனேசியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளை வென்று சோழ பேரரசின் கீழ் கொண்டு வந்தார். கடல் கடந்து பல நாடுகளை வென்றதால் இவனுக்கு "கடாரம் கொண்டான்' என்ற பட்டம் கிடைத்தது. பிரம்மாண்ட கோட்டை இந்த போர்களில் பிணைக் கைதிகளாக கொண்டு வரப்பட்ட வீரர்களை கொண்டு கங்கைகொண்ட சோழபுரத்தை எழில்மிகு நகரமாக மாற்றினார். சுமார் 260 ஏக்கர் பரப்பளவில் உட்கோட்டை என்ற இடத்தில் பிரமாண்ட கோட்டை அமைத்து அதற்குள்ளே மாளிகைமேடு என்ற இடத்தில் அரண்மனை அமைத்து ஆட்சிபுரிந்தார்.

ஏரி வெட்டிய சோழன்:
********************
அத்துடன் இந்த பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்கை வளம்பெற மேற்கு பகுதியில் சோழகங்கம் என்னும் மிகப்பெரிய ஏரியை வெட்டி இந்த பகுதியில் விவசாயம் செழிக்க செய்தார். இந்த ஏரிதான் பொன்னேரி என்று அழைக்கப்படுகிறது. கங்கை வரை சென்று வென்று வந்தபோது அங்கிருந்து குடம் குடமாக கொண்டு வந்த தண்ணீரை இந்த ஏரியில் ஊற்றினார்களாம்.

பாண்டியனை விரட்டி விரட்டி வென்ற ராஜேந்திரன் அதேபோல பாண்டிய மன்னர்கள், சோழர்களின் பராக்கிரமத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறினர். இதனால் தங்களது மணிமகுடத்தை சோழர்கள் கைப்பற்றி விடாமல் தவிர்ப்பதற்காக இலங்கைக்குக் கொண்டு போய் பத்திரப்படுத்தினர். இதை பறித்து வர ராஜராஜ சோழன் முயன்றும் முடியவில்லை. ஆனால் ராஜேந்திர சோழன் மிகவும் சாணக்கியமாக செயல்பட்டு மணிமகுடத்தை பறித்துக் கொண்டு வந்தார். கூடவே சிங்கள மன்னர்களையும் போர் புரிந்து வென்றார்.

ராஜராஜனை விட வீரம் மிக்கவர் தந்தை ராஜராஜ சோழனை விட வீரம் மிக்கவர், மதியூகி என்று பாராட்டப்படுகிறார் ராஜேந்திர சோழன். தோல்வியே அறியாதவர் இவர். தோல்வியைச் சந்திக்காத, அதிக வெற்றிகளைக் குவித்த ஒரே இந்திய மன்னர் என்றும் போற்றப்படுகிறார்.

தாசியை மனைவியாக்கிய பெருமைக்குரியவர் சாதாரண தாசி குலத்தைச் சேர்ந்த பெண்ணை கோவில் வாசலில் சந்தித்து அவரைப் பிடித்துப் போய் மணந்து அவருக்குரிய மரியாதைகளை, வசதிகளைச் செய்து கொடுத்தவரும் கூட. அவரது பெயர் பாவை. இந்த பாவையின் சிலை கங்கை கொண்ட சோழபுரம் கோவிலில் இப்போதும் கூட உள்ளது.

Comments

Popular posts from this blog

தமிழன் என்று சொல்லுவோம் தலை நிமிர்ந்து நிற்போம் தமிழை தலை நிமிர்ந்து நிற்க செய்வோம்!!

  துப்பாக்கி,பீரங்கி இல்லாமல் வெறும் வாளும், வில்லும் கொண்டு இமயம் முதல் இன்றைய இந்தோனேசியாவான சுமத்திரை வரை கி.பி 1000 -ல் ஆண்ட ராஜராஜ சோழனையும், திறம் மிகுந்தநெடுஞ்செழியனையும், கரிகாலனையும் சொல்லி வளர்க்காமல் ஒன்றுக்கும் உதவாத முதலாம், இரண்டாம் உலக போர்களை அல்லவா சொல்லி வளர்த்தீர்கள். தமிழனின் சிறப்பை சொல்லி தமிழன் என்று பெருமை கொள்ளும்படி செய்து, மேற்கத்தியர்கள் 5000 ஆண்டுகளுக்கு முன் மொழியற்று காட்டுவாசிகளாய் இருந்த போதே இங்கே கலாச்சாரம் தோன்றி சிலப்பதிகாரமும், குறளும் இயற்ற பட்டு விட்டன என்பதை சொல்லி வளர்த்திருந்தால் இன்று ஏன் இளைஞன் மேற்கு மோகம் கொண்டு அலைகிறான்? இந்த கொடுமைகளுக்கு ஆங்கிலம் படிக்காவிட்டால் இன்றைய சூழ்நிலையில் எந்த துறையிலும் மின்ன முடியாது என்று பதில் வாதம் வைக்கிறார்கள்.இப்படி ஆதாயத்தை முன்னிலைபடுத்தி பற்றையும், பாசத்தையும் புறக்கணிப்பது என்ன நியாயம்?.இந்த பாணியில் ஆதாய நோக்கில் வளரும் பிள்ளைகள் கடைசியில் உங்களை அதே வழியில் பாசத்தை மறந்து முதியோர் இல்லங்களில் தள்ளுகிறார்கள். தாய் மொழியை மதிக்காதவன் எப்படி தாயை மதிப்பான். டையிலும், ஷூவிலும் நீங்கள் ஆரம்...

ஒளவையாரின் ஆத்திச்சூடி

1. அறம் செய விரும்பு எப்பொழுதும் நல்ல காரியங்களை மட்டுமே செய்வதற்கு ஆசைப்பட வேண்டும். மறந்தும் மனதால்கூட மற்றவர்களுக்கு கெடுதல் தரும் விஷயங்களைப் பற்றி நினைக்கக் கூடாது. 2. ஆறுவது சினம் கோபம் கொள்ளக் கூடாது. கோபத்தைத் தணிக்க வேண்டும். கோபத்தைக் குறைக்க வேண்டும். கோபம் வரும்போது பேச்சைக் குறைத்துக்கொள்ள வேண்டும். அப்போது எடுக்கும் எந்த முடிவும் சரியாக இருக்காது. கோபம் குறைந்த பிறகு ஆற அமர யோசித்து எடுக்கும் முடிவே சரியாக இருக்கும். எனவே கோபத்தைக் குறைத்துக் கொள்வது சாலச் சிறந்தது. கோபம் கொள்ளாமல் இருப்பது அதைவிட சிறப்பாக இருக்கும்.   3. இயல்வது கரவேல் நம்மால் இயன்றதை ஒளிக்காமல் மறைக்காமல் செய்ய வேண்டும். செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து விட்ட பிறகு அதை ஏன் மறைக்க வேண்டும்? அது மட்டுமல்ல. செய்ய நினப்பதை உடனே செய்துவிட வேண்டும். அதை ஒத்திப் போட்டால் பிறகு அதை செய்வதற்கு வாய்ப்பு இல்லாமல் போய்விடக் கூடும். எனவே நம்மால் முடிந்ததை உடனடியாக செய்து விட வேண்டும். அதையும் யாருக்கும் தெரியாமல் மறைக்காமல் செய்து விட வேண்டும். 4. ஈவது விலக்கேல் பிறருக்கு உதவி செய்வ...

தொண்டைமானாறு:

தொண்டைமானாறு என்ற பெயரை கேட்டதும் யாழ்பாண குடாநாட்டின் வடகரையில் தொண்டைமானாறு என்ற ஊரும், ஊரின் தென்கோடியில் உள்ள செல்வச்சந்நிதி என்ற இனிய பெயரை உடைய முருகன் ஆலயமும் இந்த இடங்களைத் தெரிந்த ஒருவரின் மனக்கண்முன் தோன்றும். தொண்டைமானாறு என்னும் இவ்விடத்திற்கு பெயர் வரக்காரணம் , தொண்டைமான் மன்னர் ஒருவரின் ஆட்சியின் கீழ் இவ்விடம் இருந்ததே காரணம். இங்கே வந்த தொண்டைமான் அரசன் யார் ?அவன் தமிழ்நாட்டில் எந்த இடத்தில் இருந்து வந்தான் ? எப்போது இங்கு வந்தான் ? வந்த தொண்டைமான் அரசன் என்ன செய்தான் ? போன்ற பல கேள்விகள் நமக்கு எழும். இதற்கான  பதிலை இலங்கை வரலாற்று ஆசிரியர்களால் ஆராய்ந்து எழுதப்பட்ட "தொண்டைமானாரும்  செல்வச்சநிதியும்" என்னும் நூலில் உள்ள செய்தியை உங்களுக்காக இங்கு பகிர்கிறேன். நூல் : தொண்டைமானாரும் செல்வச்சநிதியும் ஆக்கியோன் : சே.நாகலிங்கம் வெளியீடு :  வல்வை வரலாற்று ஆவண காப்பகம் கெனடா தாய்நாட்டுத்  தமிழர்களின் வரலாற்றை பார்க்கும் போது, அங்கே கிபி இரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் காஞ்சிபுரத்தை தலைநகரமாக கொண்டு ஆட்சி செய்த தொண்டைமான் இளந்திரையனும் அவனை தொடர்...