Skip to main content

Posts

Showing posts from December, 2012

சாதி கெட்டதா? நல்லதா?

" மதம்" சமத்துவம் என்ற போர்வையில் உருவாக்கும் நன்மையைவிட அது ஏற்படுத்தும் அழிவே அதிகம். ‘சமத்துவத்’துக்கு எதிரான "சாதி"  ஏற்படுத்தும் அழிவைவிட அது உருவாக்கும் நன்மைகள் அதிகம். மனித இனம், இரண்டு பெரும் பிரிவாகப் பிரிந்தது: மதம் என்ற அடையாளத்தின் கீழ் வாழ ஆரம்பித்த பிரிவு… சாதி என்ற அடையாளத்தின் கீழ் வாழ ஆரம்பித்த பிரிவு என வாழ ஆரம்பித்தது. அதில் சாதி மிகவும் இழிவானது என்று மதத்தை அடிப்படையாகக் கொண்டு வாழ ஆரம்பித்த மேற்குலகம் உரத்த குரலில் சொல்லி, அதை சாதிய அமைப்பில் வாழும் நம்மவர்களும் ஏற்றுக் கொண்டு விட்டிருக்கின்றனர். இடை, கடை சாதியினர் மிகவும் வேதனை நிறைந்த ஒரு வாழ்க்கையை வாழ்ந்ததாகவும் அவர்களுடைய அனைத்து வேதனைகளுக்கும் மேல் சாதியினர்தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. ஆனால், உண்மை நிலை என்ன? சாதிய வாழ்க்கை முறை அந்த அளவுக்கு இழிவானதுதானா என்பதை முதலில் பார்ப்போம். சாதி அமைப்பு வலுவாக இருந்த காலகட்டத்தில் இந்தியா அனைத்துக் கலைகளிலும் சிறந்ததாக இருந்திருக்கிறது. கல்வியில் சிறந்து விளங்கியிருக்கிறது. தத்துவம், ஆன்மிகம் போன்ற துறைகளில் உலகுக்கே முன்னோடியாக இருந்திரு

வீரநாராயண ஏரி

தொண்டை நாட்டுக்கும் சோழ நாட்டுக்கும் இடையில் உள்ள திருமுனைப்பாடி நாட்டின் தென்பகுதியில், தில்லைச் சிற்றம்பலத்துக்கு மேற்கே இரண்டு காததூரத்தில், அலை கடல் போன்ற ஓர் ஏரி விரிந்து பரந்து கிடக்கிறது. அதற்கு வீரநாராயண ஏரி என்று பெயர்.  அது தெற்கு வடக்கில் ஒன்றரைக் காத நீளமும் கிழக்கு மேற்கில் அரைக் காத அகலமும் உள்ளது. புது வெள்ளம் வந்து பாய்ந்து ஏரியில் நீர் நிரம்பித் ததும்பி நிற்கும் ஆடி ஆவணி மாதங்களில் வீரநாராயண ஏரியைப் பார்ப்பவர் எவரும் நம்முடைய பழந்தமிழ் நாட்டு முன்னோர்கள் தங்கள் காலத்தில் சாதித்த அரும்பெரும் காரியங்களைக் குறித்துப் பெருமிதமும் பெரு வியப்பும் கொள்ளாமலிருக்க முடியாது.    ஆடிப் பதினெட்டாம் பெருக்கன்று சோழநாட்டு நதிகளிலெல்லாம் வெள்ளம் இருகரையும்தொட்டுக் கொண்டு ஓடுவது வழக்கம். அந்த நதிகளிலிருந்து தண்ணீர் பெறும் ஏரிகளும் பூரணமாக நிரம்பிக் கரையின் உச்சியைத் தொட்டுக் கொண்டு அலைமோதிக் கொண்டிருப்பது வழக்கம். வட காவேரி என்று பக்தர்களாலும் கொள்ளிடம் என்று பொது மக்களாலும் வழங்கப்பட்ட நதியிலிருந்து வடவாற்றின் வழியாகத் தண்ணீர் வந்து வீர நாராயண ஏரியில் பாய்ந்து அதை ஒரு பொ