அந்நிய மொழிகள் ஆயிரம் முளைத்தும் அழியாக் கதிராய் அவள் தான் நிலைத்தாள்.... பேரலை வந்தே பெருஞ்சேதம் நிகழ்ந்தும் வள்ளுவன் சிலையாய் பெருமையுடன் நின்றாள்.... எம்மொழியிலும் காணவியலா இனிமையது எம்மொழியில் செம்மொழியாய் சிறந்திடவே சரித்திரமும் படைத்தாள்.... அம்மியம்மி அரைத்தாலும் அழித்திட இயலுமோ ? இம்மையிலும் மறுமையிலும் இதுபோல் மொழியுண்டோ ? உணர்ந்திட்ட உள்ளங்கள் உள்ளதிங்கு சொற்பமாக உறுதியுடன் தமிழ்பேச பிறமொழியாகும் அற்பமாக... தமிழராக வாழ்வதே தரணியில் நம் பேறு தடையின்றி எந்நாளும்.!! தமிழ் வாழுமென்பதில் மறுப்பேது....!!
தமிழே! அமுதே!! எனதுயிரே!! "சமுதாயம் காப்பது "சத்ரியன்" தர்மம்! வீழ்வது நாமாகிலும் வாழ்வது நம் இனமாகட்டும்!"