Skip to main content

Posts

Showing posts from May, 2013

நம்மொழிக்கு தமிழ் என்று பெயர் எப்படி வந்தது?!

க, ச, ட, த, ப, ற – ஆறும் வல்லினம்., ங, ஞ, ண, ந, ம, ன – ஆறும் மெல்லினம்., ய, ர, ல, வ, ழ, ள – ஆறும் இடையினம். உலக மாந்தன் முதல் முதலில் பயன்படுத்திய உயிர் ஒலிகள் அ(படர்க்கை), இ(தன்னிலை), உ(முன்னிலை) என்பது பாவாணர் கருத்து. தமிழின் மெய் எழுத்துக்களில் வல்லினத்தில் ஒன்றும், மெல்லினத்தில் ஒன்றும், இடையினத்தில் ஒன்றுமாக மூன்று மெய் எழுத்துக்களைத் தேர்ந்தெடுத்தனர். அவை த், ம், ழ் என்பவை. இந்த மூன்று மெய்களுடன், உலகின் முதல் உயிரெழுத்துக்களை வரிசைப்படுத்தி முறையே கூட்டி… த் + அ = 'த' வாகவும், ம் + இ = 'மி' யாகவும், ழ் + உ = ‘ழு’ வாகவும் என்று "தமிழு" என்று ஆக்கி, பிறகு கடையெழுத்திலுள்ள உகரத்தை நீக்கி தமிழ் என்று அழைத்தனர். மொழியில் தான் அளவற்ற நுணுக்கங்கள் என்றால், பெயரில் கூடவா!! வாழ்க எம் தாய்த்தமிழ் வாழியவே என்றென்றும்!!

எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்! என்று சங்கே முழங்கு….!!

    எங்கும் தமிழ் .! எதிலும் தமிழ்..! என்று சங்கே முழங்கு…. !! எங்கும் வன்னியர்.! எதிலும் வன்னியர்..! என்று…. சங்கே முழங்கு.. .!! உலகம் போற்ற வாழ்ந்த  உத்தமர்களின் வரிசையிலே..  வாழ்வான் வன்னியன்..  என்று.. சங்கே முழங்கு.. !! எதற்கும் இளைத்தவன் இவனில்லை என்று சங்கே முழங்கு.. .. !! அனைவரையும் வாழவைப்பான்… அவனுக்கு நிகர் அவனேதான்…  அவன்தான் வன்னியன் என்று சங்கே முழங்கு… .. !! ஏக்கம் எங்கும் போக்கிடவே… துணிவுகொண்டு அழித்திடுவான்…. வீரம் செறிந்தவன்… வீர வன்னியன்… ! என்று சங்கே முழங்கு… .. !! சொர்ப்ப காசுக்கு ஆங்கிலேயரிடம் சென்னையை தானம் கொடுத்த சென்னப்ப நாயக்கர்…. நம் இனம் தான்…! என்று சங்கே முழங்கு… .. !!   வாரிகொடுத்த வள்ளல் செங்கல்வராய நாயக்கரும்…  நம் இனம் தான்… ! என்று சங்கே முழங்கு… .. !! இருபதாயிரம் கானி நிலத்தை வாரிசே இல்லாமல் விட்டுச்சென்ற ஆளவந்தான் வள்ளலும்… நம் இனம்தான்… ! என்று சங்கே முழங்கு… .. !! வரலாறு படைத்த பல்லவ மன்னன் பரம்பரையும்… நம் இனம்தான்… ! என்று சங்கே முழங்கு… .. !! புதிய வரலாற்றை உருவாக்க துடிக்கும் எல்லா நெஞ்சங்களும்… இதை ப

பூம்புகார் நகரின் சிறப்பு

      தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தொடர்பான செய்திகள், தமிழ்நாட்டில் முறையாக அறிவிக்கப்படவில்லை. 1993 ஆம் ஆண்டில், இந்தியக் கடல் ஆய்வு நிறுவனம் (கோவா) மேற்கொண்ட முதல்கட்ட ஆய்வுகளிலேயே, பூம்புகார் நகரின் சிறப்பு வெளிப்பட்டது. இந்திய அரசின் நிறுவனங்களில் பணியாற்றும் சில தமிழ்ப் பகைவர்களால், இந்த ஆய்வுகள் நிறுத்தப்பட்டன. பணப் பற்றாற்குறை என்று பொய் சொல்லப்பட்டது. 1990-களில், குசராத்தில் உள்ள த ுவாரகையை அகழ்வாய்வு செய்ய, இந்திய அரசு பல கோடிகளைச் செலவிட்டது. அப்போதெல்லாம் பற்றாக்குறை பற்றிய பேச்சு எழவில்லை. துவாரகையில் எதிர்பார்த்த சான்றுகள் கிடைக்கவில்லை. சிந்துவெளிக்கு முந்திய நகரம் துவாரகை (கண்ணன் வாழ்ந்திருந்ததாகச் சொல்லப்படும் நகரம்) என அறிவிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் வெற்றி பெறவில்லை. இந்நிலையில் பூம்புகாரின் ஆய்வுகள் தமிழர்களின் தொன்மையை வெளிப்படுத்தி விடும் என்று சிலர் கருதியதின் விளைவாகவே, ஆய்வுப் பணிகள் நிறுத்தப்பட்டன. தமிழகத்தில் ஆய்வு செய்து எடுக்கப்பட்ட படங்கள் தமிழகத்தில் வெளியிடப் படவில்லை. மாறாக, பெங்களுரில் ஒருநாள் மட்டும் கண்காட்சியில் காட்டப்பட்டது

என்னுயிர் "தமிழா!"

படம் பார்த்தே பாவத்திலே பாதியை செய்தோம் தன் அகம் காட்டிய அழகிக்கெல்லாம் ஆலயம் செய்தோம்!! நடிகன் வெறும் நடிகன்தான் தெரிந்து கொள்க! நடிப்பு நாடாள தகுதி அல்ல புரிந்து கொள்க!! தமிழை வளர்த்த பெரியவர்களை தெருவில் வைத்தோம்! தமிழை வைத்து வளர்ந்தவர்களை பதவியில் வைத்தோம்!! திராவிட தெலுங்கன், கன்னடன், மலையாளி என்றாவது திராவிடன் என்று சொன்னதுண்டா?? நாம் ஏமாந்த கதையெல்லாம் ஆவணம் செய்வோம்! நம் தலைமுறைக்கு அறிவூட்டி வரும் ஆபத்தை அழிப்போம்!! "தமிழ்நாட்டை தமிழன் நிர்வகிக்கட்டும்!" "தமிநாட்டை தமிழன் ஆளட்டும்!!"  ஒன்றுபடுவோம்!  வென்று காட்டுவோம்!!  

அம்பாசங்கர் குழுவின் பரிந்துரையும், எம்ஜிஆர் அவர்கள் வன்னியர்க்கு இழைத்த துரோகமும் :

============================== =================== ======================= வடதமிழகத்தில் எம்ஜிஆருக்கு ஆதரவு இல்லாத நேரத்தில் எம்ஜிஆரை அழைத்து வந்து சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் முதல் மாணவரணி நாத்தி காட்டியவர் வன்னியரான வல்லம்படுகை பாலசுந்தரம் . இவரது தீவிர செயல்பாட்டின் காரணமாக திமுக மாணவர் அணியை சாரந்தவர்களால் , அதே மண்ணில் வெட்டி சாய்க்கப்பட்டார்...  1972 இல் திமுகவை விட்டு எம்ஜிஆர் அவர்கள் வெளியேற்றப்பட்ட போது, திமுகவினரோடு எழுந்த அரசியல் விரோதத்தில் வெட்டி கொல்லப்பட்டவர் சுகுமாரன் . இவர் வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர் .   அப்போது இவரின் உயிர் தியாகம் எம்ஜியாரின் அரசியல் வாழ்வுக்கு அடித்தளமாக அமைந்தது என்று சொல்லலாம் .   சுகுமாரன் கொலையுண்ட சுவரொட்டி புகைப்படங்களை ஊரெங்கும் ஒட்டிதான் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது . ஆனால் இந்த தியாகங்களுக்காக எல்லாம் எம்ஜிஆர் வன்னியர் இனத்திற்கு பெரிதாக எதுவும் செய்து விடவில்லை . மாறாக, தருமபுரி , வடார்க்காடு , திருப்பத்தூர் பகுதிகளில் காவல்துறை அதிகாரிகளை கொம்புசீவி விட்டு பல வன்னிய இளைஞசர்களை நக்சல