க, ச, ட, த, ப, ற – ஆறும் வல்லினம்., ங, ஞ, ண, ந, ம, ன – ஆறும் மெல்லினம்., ய, ர, ல, வ, ழ, ள – ஆறும் இடையினம். உலக மாந்தன் முதல் முதலில் பயன்படுத்திய உயிர் ஒலிகள் அ(படர்க்கை), இ(தன்னிலை), உ(முன்னிலை) என்பது பாவாணர் கருத்து. தமிழின் மெய் எழுத்துக்களில் வல்லினத்தில் ஒன்றும், மெல்லினத்தில் ஒன்றும், இடையினத்தில் ஒன்றுமாக மூன்று மெய் எழுத்துக்களைத் தேர்ந்தெடுத்தனர். அவை த், ம், ழ் என்பவை. இந்த மூன்று மெய்களுடன், உலகின் முதல் உயிரெழுத்துக்களை வரிசைப்படுத்தி முறையே கூட்டி… த் + அ = 'த' வாகவும், ம் + இ = 'மி' யாகவும், ழ் + உ = ‘ழு’ வாகவும் என்று "தமிழு" என்று ஆக்கி, பிறகு கடையெழுத்திலுள்ள உகரத்தை நீக்கி தமிழ் என்று அழைத்தனர். மொழியில் தான் அளவற்ற நுணுக்கங்கள் என்றால், பெயரில் கூடவா!! வாழ்க எம் தாய்த்தமிழ் வாழியவே என்றென்றும்!!
தமிழே! அமுதே!! எனதுயிரே!! "சமுதாயம் காப்பது "சத்ரியன்" தர்மம்! வீழ்வது நாமாகிலும் வாழ்வது நம் இனமாகட்டும்!"