Skip to main content

அம்பாசங்கர் குழுவின் பரிந்துரையும், எம்ஜிஆர் அவர்கள் வன்னியர்க்கு இழைத்த துரோகமும் :

========================================================================

வடதமிழகத்தில் எம்ஜிஆருக்கு ஆதரவு இல்லாத நேரத்தில் எம்ஜிஆரை அழைத்து வந்து சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் முதல் மாணவரணி நாத்தி காட்டியவர் வன்னியரான வல்லம்படுகை பாலசுந்தரம் . இவரது தீவிர செயல்பாட்டின் காரணமாக திமுக மாணவர் அணியை சாரந்தவர்களால் , அதே மண்ணில் வெட்டி சாய்க்கப்பட்டார்...




 1972 இல் திமுகவை விட்டு எம்ஜிஆர் அவர்கள் வெளியேற்றப்பட்ட போது, திமுகவினரோடு எழுந்த அரசியல் விரோதத்தில் வெட்டி கொல்லப்பட்டவர் சுகுமாரன் . இவர் வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர் . 

அப்போது இவரின் உயிர் தியாகம் எம்ஜியாரின் அரசியல் வாழ்வுக்கு அடித்தளமாக அமைந்தது என்று சொல்லலாம் . 

சுகுமாரன் கொலையுண்ட சுவரொட்டி புகைப்படங்களை ஊரெங்கும் ஒட்டிதான் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது .

ஆனால் இந்த தியாகங்களுக்காக எல்லாம் எம்ஜிஆர் வன்னியர் இனத்திற்கு பெரிதாக எதுவும் செய்து விடவில்லை . மாறாக, தருமபுரி , வடார்க்காடு , திருப்பத்தூர் பகுதிகளில் காவல்துறை அதிகாரிகளை கொம்புசீவி விட்டு பல வன்னிய இளைஞசர்களை நக்சலைட்டுகள் என்ற பெயரில் சுட்டு கொள்ள செய்தார் . 

இதுதவிர அம்பாசங்கர் குழு அளித்த பரிந்துரையை நடைமுறை படுத்தாமல் கிடப்பில் போட்டதும் தான் எம்ஜிஆர் அரசுதான் . இந்த குழு மருத்துவர் அய்யாவின் கோரிக்கையை ஏற்று 1982 இல் அமைக்கப்பட்டது.

அதற்க்கு முன் இருபது கோரிக்கையை கொண்ட கருத்துகளை முன்வைத்தார் மருத்துவர் அய்யா . 

• வன்னியர்கள் பெரும்பாலும் கிராமங்களில் வசிப்பதால் அரசின் சலுகைகள் முழுவதுமாக அவர்களை சென்றடைவதில்லை . 

• 95 சதவிகிதம் வன்னியர்கள் ஏழ்மை நிலையில் கூலித்தொழிலாளியாக இருப்பதாலும், கல்வியின் முக்கியத்துவம் அறியாததாலும் அவர்களது குழந்தைகளும் , கல்வி அறிவு பெற முடிவதில்லை . 

• பிற்படுத்தப்பட்டோருக்கான கல்வி உதவித் தொகை பெரும் ஆண்டு வருமானத்தை 12,000 ரூபாயாக உயர்த்த வேண்டும் .

• இடஒதுக்கீடு முறையானது அனைத்து துறைகளிலும் பின்பற்ற படவேண்டும் .

• பிற்படுத்தப்பட்டோருக்கான சதவிகித இடஒதுக்கீட்டை மக்கள் தொகை கணக்கீட்டின் அடிப்படையில் பிரித்து வழங்கினால்தான் வன்னியர்கள் பலன் அடைய முடியும் . 

• வன்னியர்களுக்கென்று தனி வாரியம் அமைத்து அவர்கள் நலனை மேம்படச் செய்ய வேண்டும் .

• சேலம், செங்கல்ப்பட்டு போன்ற மாநகராட்சிகளில் வன்னியர்கள் துப்புரவு தொழிலாளர்களாகவும் , திருநெல்வேலி போன்ற மாவட்டத்தில் இன்னும் கீழ் நிலை வேலைகளையும் அவர்கள் செய்து வருகிறார்கள் . இவர்களை அடையாளம் கண்டு அவர்களின் புணர் வாழ்விற்கு அரசு உதவிட வேண்டும் .

• வன்னியர்கள் பெரும்பாலும் வசிக்கும் பாராளுமன்ற -சட்டமன்ற தொகுதிகள் இன்றளவில் தனித் தொகுதிகளாக உள்ளன . 

• அதை ரத்து செய்வதின் மூலம் பெருமான்மை வன்னிய சமுதாய மக்களின் கோரிக்கைகள் , பாராளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் ஒலித்திட வகை செய்திட வேண்டும் .

என்பது போன்ற இருபது கருத்துக்கள் அடங்கிய கோரிக்கைகளை நம் மருத்துவர் அய்யா முன்வைக்க அம்பாசங்கர் குழு அதை கனிவுடன் பரிசீலித்து மூன்று ஆண்டுகள் ஆய்வு செய்த பின் 1985 ஆம் ஆண்டு தனது பரிந்துரைகளை அப்போதைய முதல்வர் எம்ஜியாரின் முன் வைத்தது .

தமிழகத்தை பொறுத்த வரையில் , பெரும்பான்மை சமூகமாக வாழ்வது வன்னியர்கள் என்றும், இவர்களில் பெரும்பான்மையான மக்கள் குத்தகைக்கு பயிர் செய்து செய்தல் , நெசவு, மரம் வெட்டுதல் , கல் உடைத்தல் , சாலை போடுதல் , வண்டி ஒட்டுதல் போன்ற ஏழ்மையான நிலையில் உள்ளனர் என்றும் அவர்கள் வாழ்வை மேம்படுத்த வேண்டும் என்றும் அந்த அம்பாசங்கர் அறிக்கை குறிப்பிடிருந்தது.

சட்டநாதன் குழுவை போல இந்த குழுவும், பிற்படுத்த பட்டோர் பட்டியலில் சில சாதிகள் நன்கு முன்னேறிய சாதிகள் என்றும், அவைகளை பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டது . 

வன்னியர்கள் அனைத்து துறைகளிலும் பின்தங்கி இருப்பதால், அவர்களை மிகவும் பிற்படுத்த பட்டோர் என்று அறிவித்து இவர்களுக்கு தனி இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தது .

ஆனால் சட்டநாதன் குழுவின் பரிந்துரையை கிடப்பில் போட்டு கருணாநிதி துரோகம் செய்தது போல, எம்ஜியாரும் அம்பாசங்கர் குழுவின் பரிந்துரையை கிடப்பில் போட்டு தன் பங்கிற்கு வன்னியர்களுக்கு துரோகம் செய்தார் . 

இதனால் எந்தவித முன்னேற்றமும் அடையாமல் இருந்தது வன்னிய சமுதாயம் . :(

இதுதான் எம்ஜியாருக்காக உயிர் நீத்த வன்னிய சமுதாயத்தினருக்கு இவர் ஆற்றிய நன்றி கடன் .

Comments

Popular posts from this blog

ஒளவையாரின் ஆத்திச்சூடி

1. அறம் செய விரும்பு எப்பொழுதும் நல்ல காரியங்களை மட்டுமே செய்வதற்கு ஆசைப்பட வேண்டும். மறந்தும் மனதால்கூட மற்றவர்களுக்கு கெடுதல் தரும் விஷயங்களைப் பற்றி நினைக்கக் கூடாது. 2. ஆறுவது சினம் கோபம் கொள்ளக் கூடாது. கோபத்தைத் தணிக்க வேண்டும். கோபத்தைக் குறைக்க வேண்டும். கோபம் வரும்போது பேச்சைக் குறைத்துக்கொள்ள வேண்டும். அப்போது எடுக்கும் எந்த முடிவும் சரியாக இருக்காது. கோபம் குறைந்த பிறகு ஆற அமர யோசித்து எடுக்கும் முடிவே சரியாக இருக்கும். எனவே கோபத்தைக் குறைத்துக் கொள்வது சாலச் சிறந்தது. கோபம் கொள்ளாமல் இருப்பது அதைவிட சிறப்பாக இருக்கும்.   3. இயல்வது கரவேல் நம்மால் இயன்றதை ஒளிக்காமல் மறைக்காமல் செய்ய வேண்டும். செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து விட்ட பிறகு அதை ஏன் மறைக்க வேண்டும்? அது மட்டுமல்ல. செய்ய நினப்பதை உடனே செய்துவிட வேண்டும். அதை ஒத்திப் போட்டால் பிறகு அதை செய்வதற்கு வாய்ப்பு இல்லாமல் போய்விடக் கூடும். எனவே நம்மால் முடிந்ததை உடனடியாக செய்து விட வேண்டும். அதையும் யாருக்கும் தெரியாமல் மறைக்காமல் செய்து விட வேண்டும். 4. ஈவது விலக்கேல் பிறருக்கு உதவி செய்வதைத்

பூம்புகார் நகரின் சிறப்பு

      தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தொடர்பான செய்திகள், தமிழ்நாட்டில் முறையாக அறிவிக்கப்படவில்லை. 1993 ஆம் ஆண்டில், இந்தியக் கடல் ஆய்வு நிறுவனம் (கோவா) மேற்கொண்ட முதல்கட்ட ஆய்வுகளிலேயே, பூம்புகார் நகரின் சிறப்பு வெளிப்பட்டது. இந்திய அரசின் நிறுவனங்களில் பணியாற்றும் சில தமிழ்ப் பகைவர்களால், இந்த ஆய்வுகள் நிறுத்தப்பட்டன. பணப் பற்றாற்குறை என்று பொய் சொல்லப்பட்டது. 1990-களில், குசராத்தில் உள்ள த ுவாரகையை அகழ்வாய்வு செய்ய, இந்திய அரசு பல கோடிகளைச் செலவிட்டது. அப்போதெல்லாம் பற்றாக்குறை பற்றிய பேச்சு எழவில்லை. துவாரகையில் எதிர்பார்த்த சான்றுகள் கிடைக்கவில்லை. சிந்துவெளிக்கு முந்திய நகரம் துவாரகை (கண்ணன் வாழ்ந்திருந்ததாகச் சொல்லப்படும் நகரம்) என அறிவிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் வெற்றி பெறவில்லை. இந்நிலையில் பூம்புகாரின் ஆய்வுகள் தமிழர்களின் தொன்மையை வெளிப்படுத்தி விடும் என்று சிலர் கருதியதின் விளைவாகவே, ஆய்வுப் பணிகள் நிறுத்தப்பட்டன. தமிழகத்தில் ஆய்வு செய்து எடுக்கப்பட்ட படங்கள் தமிழகத்தில் வெளியிடப் படவில்லை. மாறாக, பெங்களுரில் ஒருநாள் மட்டும் கண்காட்சியில் காட்டப்பட்டது

தொண்டைமானாறு:

தொண்டைமானாறு என்ற பெயரை கேட்டதும் யாழ்பாண குடாநாட்டின் வடகரையில் தொண்டைமானாறு என்ற ஊரும், ஊரின் தென்கோடியில் உள்ள செல்வச்சந்நிதி என்ற இனிய பெயரை உடைய முருகன் ஆலயமும் இந்த இடங்களைத் தெரிந்த ஒருவரின் மனக்கண்முன் தோன்றும். தொண்டைமானாறு என்னும் இவ்விடத்திற்கு பெயர் வரக்காரணம் , தொண்டைமான் மன்னர் ஒருவரின் ஆட்சியின் கீழ் இவ்விடம் இருந்ததே காரணம். இங்கே வந்த தொண்டைமான் அரசன் யார் ?அவன் தமிழ்நாட்டில் எந்த இடத்தில் இருந்து வந்தான் ? எப்போது இங்கு வந்தான் ? வந்த தொண்டைமான் அரசன் என்ன செய்தான் ? போன்ற பல கேள்விகள் நமக்கு எழும். இதற்கான  பதிலை இலங்கை வரலாற்று ஆசிரியர்களால் ஆராய்ந்து எழுதப்பட்ட "தொண்டைமானாரும்  செல்வச்சநிதியும்" என்னும் நூலில் உள்ள செய்தியை உங்களுக்காக இங்கு பகிர்கிறேன். நூல் : தொண்டைமானாரும் செல்வச்சநிதியும் ஆக்கியோன் : சே.நாகலிங்கம் வெளியீடு :  வல்வை வரலாற்று ஆவண காப்பகம் கெனடா தாய்நாட்டுத்  தமிழர்களின் வரலாற்றை பார்க்கும் போது, அங்கே கிபி இரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் காஞ்சிபுரத்தை தலைநகரமாக கொண்டு ஆட்சி செய்த தொண்டைமான் இளந்திரையனும் அவனை தொடர்ந்து , தம