Skip to main content

தமிழ் இலக்கணச் சொற்களுக்கு ஆங்கிலம்

எழுத்து - Letter

முதல் எழுத்து – Primary letter

சார்பு எழுத்து – Secondary letter

உயிர் – Vowels

மெய் – Consonants

ஆய்தம் – Guttural

குறில் – Short Letters

நெடில் – Long letters

அளபெடை – Prolongation of letters, Protraction

சுட்டெழுத்து – Demonstrative letters

அண்மைச் சுட்டு – Proximate demonstratives

சேய்மைச் சுட்டு – Remote demonstratives

வினாவெழுத்து – Interrogative letters

இன எழுத்து – Kindred letters

வல்லினம் – Hard Consonants

மெல்லினம் – Soft Consonants

இடையினம் – Medial Consonants

உயிர்மெய் – Vowel-Consonants

குற்றியலுகரம்- Shortened

குற்றியலிகரம் – Shortened

பெயர்ச்சொல் – Noun

வினைச்சொல் – Verb

இடைச்சொல் – Interjection, Conjunction, Particles and Adjuncts

உரிச்சொல் – Adjective and Adverb

பொருட் பெயர் – Names of things

இடப்பெயர் – Names of places

காலப் பெயர் – Names of times

சினைப் பெயர் – Names of parts or the organs of the body

குணப் பெயர் – Names of quality

பண்புப் பெயர் – Abstract Nouns

தொழிற் பெயர் – Verbal Nouns

வினாப் பெயர் – Interrogative Nouns

இடுகுறிப் பெயர் – Conventional Nouns – Arbitraries

காரணப் பெயர் – Casual Noun

காரண இடுகுறிப் பெயர் – Casual noun used as a Coventional Noun

பொதுப்பெயர் – Epincene, Common or generic Names

ஆகுபெயர் – Metaphor, Metonymy, Synecdoche

ஆக்கப் பெயர் – Optional

வினையாலனையும் பெயர் – Conjugated Nouns, Inflectional Nouns

எழுவாய் – Subject

பயனிலை – Predicate

செயப்படு பொருள் – Objective force

உயர்தினை – Personal class

ஆஃறினை – Impersonal class

ஆண்பால் – Masculine Gender

பெண்பால் – Feminine Gender

பலர்பால் – Masculine plural and Feminine plural

ஒன்றன்பால் – Neuter Singular

பலவின்பால் – Neuter plural

ஒருமை – Singular

பன்மை – Plural

தன்மை – First person

முன்னிலை – Second person

படர்க்கை – Third Person

முதல் வேற்றுமை – Nominative case

இரண்டாம் வேற்றுமை – Acuusative case

மூன்றாம் வேற்றுமை – Instrumental case

நான்காம் வேற்றுமை – Dative case

ஐந்தாம் வேற்றுமை – Ablative case

ஆறாம் வேற்றுமை – Genitive case

ஏழாம் வேற்றுமை – Locative case

எட்டாம் வேற்றுமை – Vocative case

அண்மை விளி – Proximate vocative case

சேய்மைவிளி – Remote Vocative Case



வேற்றுமைப் புணர்ச்சி – Casal combination

அல்வழிப் புணர்ச்சி – Combination with all other parts of speeches, but nouns in one of the Cases from 2 to 7

இயல்பு – Natural

விகாரம் – Change

தோன்றல் – Reduplication, Augmentation

திரிதல் – Changing, Permutation

கெடுதல் – Dropping, Omission

பகுபதம் – Derivative or divisible word

பகாப்பதம் – Primitive or Indivisible word, Radice, Root

பதப்புணர்ச்சி – Combination of words

உருபு புணர்ச்சி – Combination of casal Particles

பகுபத உறுப்புகள் – The elements of members of divisible word

நிலை மொழி  – Standing or Preceding word

வருமொழி – Following word

பா – Poems

பாவினம் – Varities of stanza

அசை – Syllable

சீர் – A metrical foot

வழக்கு – Usage. Acceptation

மரூஉ – A contraction, or coined word, that is term, or word used by great or leraned men though not formed by grammatical rule

இடக்கரடக்கல் – anm occult, a Figurative expression

மங்கலம் – Euphemism

குழூஉகுறி – Cant, or form of speaking peculiar to a certain body of men

தளை – Junction or the Connecting of metrical feet with each other

அடி – Metrical line

தொடை –  Consonance of lines in stanza

எதுகை – Rhyme

மோனை – Alliteration

அணி – Rheoterical figure

அடைமொழிகள் – Adjuncts

போலி – Interchange of letters, Substitutes

இன்னிசை அளபெடை – Euphonic protraction

சொல்லிசை அளபெடை – Verbal protraction

சூத்திரம் – Verse

பாயிரம் – Preface

மாத்திரை – Measurement of time

பொதுப் பாயிரம் – General preface

சிறப்புப் பாயிரம் – Specual preface

உரைநடை –  Prose

முதனூல் – Original Classics

வழி நூல் – Supplemental Classics

சார்பு நூல் – Derivative Classics

Comments

Popular posts from this blog

ஒளவையாரின் ஆத்திச்சூடி

1. அறம் செய விரும்பு எப்பொழுதும் நல்ல காரியங்களை மட்டுமே செய்வதற்கு ஆசைப்பட வேண்டும். மறந்தும் மனதால்கூட மற்றவர்களுக்கு கெடுதல் தரும் விஷயங்களைப் பற்றி நினைக்கக் கூடாது. 2. ஆறுவது சினம் கோபம் கொள்ளக் கூடாது. கோபத்தைத் தணிக்க வேண்டும். கோபத்தைக் குறைக்க வேண்டும். கோபம் வரும்போது பேச்சைக் குறைத்துக்கொள்ள வேண்டும். அப்போது எடுக்கும் எந்த முடிவும் சரியாக இருக்காது. கோபம் குறைந்த பிறகு ஆற அமர யோசித்து எடுக்கும் முடிவே சரியாக இருக்கும். எனவே கோபத்தைக் குறைத்துக் கொள்வது சாலச் சிறந்தது. கோபம் கொள்ளாமல் இருப்பது அதைவிட சிறப்பாக இருக்கும்.   3. இயல்வது கரவேல் நம்மால் இயன்றதை ஒளிக்காமல் மறைக்காமல் செய்ய வேண்டும். செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து விட்ட பிறகு அதை ஏன் மறைக்க வேண்டும்? அது மட்டுமல்ல. செய்ய நினப்பதை உடனே செய்துவிட வேண்டும். அதை ஒத்திப் போட்டால் பிறகு அதை செய்வதற்கு வாய்ப்பு இல்லாமல் போய்விடக் கூடும். எனவே நம்மால் முடிந்ததை உடனடியாக செய்து விட வேண்டும். அதையும் யாருக்கும் தெரியாமல் மறைக்காமல் செய்து விட வேண்டும். 4. ஈவது விலக்கேல் பிறருக்கு உதவி செய்வதைத்

பூம்புகார் நகரின் சிறப்பு

      தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தொடர்பான செய்திகள், தமிழ்நாட்டில் முறையாக அறிவிக்கப்படவில்லை. 1993 ஆம் ஆண்டில், இந்தியக் கடல் ஆய்வு நிறுவனம் (கோவா) மேற்கொண்ட முதல்கட்ட ஆய்வுகளிலேயே, பூம்புகார் நகரின் சிறப்பு வெளிப்பட்டது. இந்திய அரசின் நிறுவனங்களில் பணியாற்றும் சில தமிழ்ப் பகைவர்களால், இந்த ஆய்வுகள் நிறுத்தப்பட்டன. பணப் பற்றாற்குறை என்று பொய் சொல்லப்பட்டது. 1990-களில், குசராத்தில் உள்ள த ுவாரகையை அகழ்வாய்வு செய்ய, இந்திய அரசு பல கோடிகளைச் செலவிட்டது. அப்போதெல்லாம் பற்றாக்குறை பற்றிய பேச்சு எழவில்லை. துவாரகையில் எதிர்பார்த்த சான்றுகள் கிடைக்கவில்லை. சிந்துவெளிக்கு முந்திய நகரம் துவாரகை (கண்ணன் வாழ்ந்திருந்ததாகச் சொல்லப்படும் நகரம்) என அறிவிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் வெற்றி பெறவில்லை. இந்நிலையில் பூம்புகாரின் ஆய்வுகள் தமிழர்களின் தொன்மையை வெளிப்படுத்தி விடும் என்று சிலர் கருதியதின் விளைவாகவே, ஆய்வுப் பணிகள் நிறுத்தப்பட்டன. தமிழகத்தில் ஆய்வு செய்து எடுக்கப்பட்ட படங்கள் தமிழகத்தில் வெளியிடப் படவில்லை. மாறாக, பெங்களுரில் ஒருநாள் மட்டும் கண்காட்சியில் காட்டப்பட்டது

தொண்டைமானாறு:

தொண்டைமானாறு என்ற பெயரை கேட்டதும் யாழ்பாண குடாநாட்டின் வடகரையில் தொண்டைமானாறு என்ற ஊரும், ஊரின் தென்கோடியில் உள்ள செல்வச்சந்நிதி என்ற இனிய பெயரை உடைய முருகன் ஆலயமும் இந்த இடங்களைத் தெரிந்த ஒருவரின் மனக்கண்முன் தோன்றும். தொண்டைமானாறு என்னும் இவ்விடத்திற்கு பெயர் வரக்காரணம் , தொண்டைமான் மன்னர் ஒருவரின் ஆட்சியின் கீழ் இவ்விடம் இருந்ததே காரணம். இங்கே வந்த தொண்டைமான் அரசன் யார் ?அவன் தமிழ்நாட்டில் எந்த இடத்தில் இருந்து வந்தான் ? எப்போது இங்கு வந்தான் ? வந்த தொண்டைமான் அரசன் என்ன செய்தான் ? போன்ற பல கேள்விகள் நமக்கு எழும். இதற்கான  பதிலை இலங்கை வரலாற்று ஆசிரியர்களால் ஆராய்ந்து எழுதப்பட்ட "தொண்டைமானாரும்  செல்வச்சநிதியும்" என்னும் நூலில் உள்ள செய்தியை உங்களுக்காக இங்கு பகிர்கிறேன். நூல் : தொண்டைமானாரும் செல்வச்சநிதியும் ஆக்கியோன் : சே.நாகலிங்கம் வெளியீடு :  வல்வை வரலாற்று ஆவண காப்பகம் கெனடா தாய்நாட்டுத்  தமிழர்களின் வரலாற்றை பார்க்கும் போது, அங்கே கிபி இரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் காஞ்சிபுரத்தை தலைநகரமாக கொண்டு ஆட்சி செய்த தொண்டைமான் இளந்திரையனும் அவனை தொடர்ந்து , தம