சினிமா நட்சத்திரங்களின் கலைநிகழ்ச்சிகளுடன் கருணாநிதிக்கு கடந்த வாரம் மேலும் ஒரு பாராட்டு விழா! எதற்காகப் பாராட்டு என்றால் தமிழ்த் திரை உலகுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கிய முதலமைச்சர் கருணாநிதி, ஒட்டு மொத்த தமிழ் திரையுலகுக்கும் பையனூர் அருகே குடியிருக்க இடம் வழங்கியிருக்கிறார். இதற்காக, ஒட்டு மொத்த தமிழ் திரையுலகமும் திரண்டு நன்றி பாராட்டும் விழாவினை சிறப்பாக நடத்தியது.
வீடில்லாதவர்களுக்கு இலவச மனைத்திட்டத்திற்குப் போதிய அரசு நிலங்கள் இல்லாத சூழலில் கூத்தாடிகளுக்கு குடியிருப்பு வீடுகளுக்கு நிலம் ஒதுக்கி இருப்பது எரியும் நெருப்பில் எண்ணை வார்ப்பதுபோல் உள்ளது.
முல்லைப் பெரியாறு விவகாரம், விலைவாசி உயர்வு, சேதுக்கால்வாய் எனப் பிரச்சினைகளில் கவனம் செலுத்தாமல் தனக்குத்தானே விருது வழங்கியும் தன்னைப் புகழ்பவர்களுக்கு சலுகைகள் வழங்கியும் காலத்தைக் கடத்தாமல் முதல்வர் கருணாநிதி அவர்கள் மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும். இல்லையேல் முதல்வர் கருணாநிதி அவர்கள் கூத்தாடிகளின் முதல்வராகவே வரலாற்றில் அறியப்படுவார்.
இன்றைய நிலைமையில் ஒரு கடைக்கோடி சினிமாக்காரனுக்கு கிடைக்கும் அங்கீகாரம் மற்ற துறையில் சிறந்து வெற்றிபெற்ற வர்களுக்கும் கிடைக்குமா? ஒரு நடிகை எளிதாக முதல்வரை அனுகி அவர்க்ளது தேவைகளை பெற்றுகொள்ளுகிறார்கள் அதைப்போல சாதாரண ஒரு விவசாய, நெசவாளி, மீனவ மக்கள் முதல்வரை சென்று அனுகி பார்க்கமுடியுமா?
தமிழ்நாட்டில் உள்ள சாதாரண குடிமகனுக்கு பிரச்னைன்னா காவல் நிலையத்தில் கம்ப்ளைன்ட் செய்தும், கோர்ட்டிலும் காத்துக்கிடக்க வேண்டும். ஆனால் சினிமா துறையில் ராதிகா சரத்குமார் பட திருட்டு வி.சி.டி பிரச்னைன்னாலோ, வடிவேலு நிலப் பிரச்னைன்னாலோ, இவர்கள் கம்ப்ளைன்ட் கூட கொடுக்க வேணாம். முதல்வரிடம் சொன்னால் போதும. அவரும் உடனே போன் போட்டு எல்லாரையும் பிடிச்சு குண்டாஸ்ல போட்டு விடுவார்கள்.
பல மக்கள் சொந்த வீடு இல்லாமல் இருக்கும் போது சினிமாக்காரர்களுக்கு மட்டும் அரசு நிலம் தருகிறது. அவர்களும் மாதம் ஒரு பாராட்டு விழா முதல்வருக்கு எடுத்து முடிந்தவரை லாபம் பார்க்கிறார்கள். கோடிகளில் படம் எடுப்பவர்களுக்கு அரசின் வரிவிலக்கு.இவர் என்ன மக்களின் முதல்வரா இல்லை சினிமாக்காரர்களுக்கு மட்டும் முதல்வரா??!!
வீடில்லாதவர்களுக்கு இலவச மனைத்திட்டத்திற்குப் போதிய அரசு நிலங்கள் இல்லாத சூழலில் கூத்தாடிகளுக்கு குடியிருப்பு வீடுகளுக்கு நிலம் ஒதுக்கி இருப்பது எரியும் நெருப்பில் எண்ணை வார்ப்பதுபோல் உள்ளது.
முல்லைப் பெரியாறு விவகாரம், விலைவாசி உயர்வு, சேதுக்கால்வாய் எனப் பிரச்சினைகளில் கவனம் செலுத்தாமல் தனக்குத்தானே விருது வழங்கியும் தன்னைப் புகழ்பவர்களுக்கு சலுகைகள் வழங்கியும் காலத்தைக் கடத்தாமல் முதல்வர் கருணாநிதி அவர்கள் மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும். இல்லையேல் முதல்வர் கருணாநிதி அவர்கள் கூத்தாடிகளின் முதல்வராகவே வரலாற்றில் அறியப்படுவார்.
இன்றைய நிலைமையில் ஒரு கடைக்கோடி சினிமாக்காரனுக்கு கிடைக்கும் அங்கீகாரம் மற்ற துறையில் சிறந்து வெற்றிபெற்ற வர்களுக்கும் கிடைக்குமா? ஒரு நடிகை எளிதாக முதல்வரை அனுகி அவர்க்ளது தேவைகளை பெற்றுகொள்ளுகிறார்கள் அதைப்போல சாதாரண ஒரு விவசாய, நெசவாளி, மீனவ மக்கள் முதல்வரை சென்று அனுகி பார்க்கமுடியுமா?
தமிழ்நாட்டில் உள்ள சாதாரண குடிமகனுக்கு பிரச்னைன்னா காவல் நிலையத்தில் கம்ப்ளைன்ட் செய்தும், கோர்ட்டிலும் காத்துக்கிடக்க வேண்டும். ஆனால் சினிமா துறையில் ராதிகா சரத்குமார் பட திருட்டு வி.சி.டி பிரச்னைன்னாலோ, வடிவேலு நிலப் பிரச்னைன்னாலோ, இவர்கள் கம்ப்ளைன்ட் கூட கொடுக்க வேணாம். முதல்வரிடம் சொன்னால் போதும. அவரும் உடனே போன் போட்டு எல்லாரையும் பிடிச்சு குண்டாஸ்ல போட்டு விடுவார்கள்.
பல மக்கள் சொந்த வீடு இல்லாமல் இருக்கும் போது சினிமாக்காரர்களுக்கு மட்டும் அரசு நிலம் தருகிறது. அவர்களும் மாதம் ஒரு பாராட்டு விழா முதல்வருக்கு எடுத்து முடிந்தவரை லாபம் பார்க்கிறார்கள். கோடிகளில் படம் எடுப்பவர்களுக்கு அரசின் வரிவிலக்கு.இவர் என்ன மக்களின் முதல்வரா இல்லை சினிமாக்காரர்களுக்கு மட்டும் முதல்வரா??!!
Comments
Post a Comment
உங்களின் கருத்துக்கள் எனக்கு ஊக்கமளிக்கும்