Skip to main content

இவரென்ன மக்களின் முதல்வரே? இல்லை கூத்தாடிகளின் முதல்வரா?

சினிமா நட்சத்திரங்களின் கலைநிகழ்ச்சிகளுடன் கருணாநிதிக்கு கடந்த வாரம் மேலும் ஒரு பாராட்டு விழா! எதற்காகப் பாராட்டு  என்றால் தமிழ்த் திரை உலகுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கிய முதலமைச்சர் கருணாநிதி, ஒட்டு மொத்த தமிழ் திரையுலகுக்கும் பையனூர் அருகே குடியிருக்க இடம் வழங்கியிருக்கிறார். இதற்காக, ஒட்டு மொத்த தமிழ் திரையுலகமும் திரண்டு நன்றி பாராட்டும் விழாவினை சிறப்பாக நடத்தியது.

வீடில்லாதவர்களுக்கு இலவச மனைத்திட்டத்திற்குப் போதிய அரசு நிலங்கள் இல்லாத சூழலில் கூத்தாடிகளுக்கு குடியிருப்பு வீடுகளுக்கு நிலம் ஒதுக்கி இருப்பது எரியும் நெருப்பில் எண்ணை வார்ப்பதுபோல் உள்ளது.

முல்லைப் பெரியாறு விவகாரம், விலைவாசி உயர்வு, சேதுக்கால்வாய் எனப் பிரச்சினைகளில் கவனம் செலுத்தாமல் தனக்குத்தானே விருது வழங்கியும் தன்னைப் புகழ்பவர்களுக்கு சலுகைகள் வழங்கியும் காலத்தைக் கடத்தாமல் முதல்வர் கருணாநிதி அவர்கள் மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும். இல்லையேல் முதல்வர் கருணாநிதி அவர்கள் கூத்தாடிகளின் முதல்வராகவே வரலாற்றில் அறியப்படுவார்.

இன்றைய நிலைமையில் ஒரு கடைக்கோடி சினிமாக்காரனுக்கு கிடைக்கும் அங்கீகாரம் மற்ற துறையில் சிறந்து வெற்றிபெற்ற வர்களுக்கும் கிடைக்குமா? ஒரு நடிகை எளிதாக முதல்வரை அனுகி அவர்க்ளது தேவைகளை பெற்றுகொள்ளுகிறார்கள் அதைப்போல சாதாரண ஒரு விவசாய, நெசவாளி, மீனவ மக்கள் முதல்வரை சென்று அனுகி பார்க்கமுடியுமா?

தமிழ்நாட்டில் உள்ள சாதாரண குடிமகனுக்கு பிரச்னைன்னா காவல் நிலையத்தில் கம்ப்ளைன்ட் செய்தும், கோர்ட்டிலும் காத்துக்கிடக்க வேண்டும். ஆனால் சினிமா துறையில் ராதிகா சரத்குமார் பட திருட்டு வி.சி.டி பிரச்னைன்னாலோ, வடிவேலு நிலப் பிரச்னைன்னாலோ, இவர்கள் கம்ப்ளைன்ட் கூட கொடுக்க வேணாம். முதல்வரிடம் சொன்னால் போதும. அவரும் உடனே போன் போட்டு எல்லாரையும் பிடிச்சு குண்டாஸ்ல போட்டு விடுவார்கள்.

பல மக்கள் சொந்த வீடு இல்லாமல் இருக்கும் போது சினிமாக்காரர்களுக்கு மட்டும் அரசு நிலம் தருகிறது. அவர்களும் மாதம் ஒரு பாராட்டு விழா முதல்வருக்கு எடுத்து முடிந்தவரை லாபம் பார்க்கிறார்கள். கோடிகளில் படம் எடுப்பவர்களுக்கு அரசின் வரிவிலக்கு.இவர் என்ன மக்களின் முதல்வரா இல்லை சினிமாக்காரர்களுக்கு மட்டும் முதல்வரா??!!

Comments

Popular posts from this blog

ஒளவையாரின் ஆத்திச்சூடி

1. அறம் செய விரும்பு எப்பொழுதும் நல்ல காரியங்களை மட்டுமே செய்வதற்கு ஆசைப்பட வேண்டும். மறந்தும் மனதால்கூட மற்றவர்களுக்கு கெடுதல் தரும் விஷயங்களைப் பற்றி நினைக்கக் கூடாது. 2. ஆறுவது சினம் கோபம் கொள்ளக் கூடாது. கோபத்தைத் தணிக்க வேண்டும். கோபத்தைக் குறைக்க வேண்டும். கோபம் வரும்போது பேச்சைக் குறைத்துக்கொள்ள வேண்டும். அப்போது எடுக்கும் எந்த முடிவும் சரியாக இருக்காது. கோபம் குறைந்த பிறகு ஆற அமர யோசித்து எடுக்கும் முடிவே சரியாக இருக்கும். எனவே கோபத்தைக் குறைத்துக் கொள்வது சாலச் சிறந்தது. கோபம் கொள்ளாமல் இருப்பது அதைவிட சிறப்பாக இருக்கும்.   3. இயல்வது கரவேல் நம்மால் இயன்றதை ஒளிக்காமல் மறைக்காமல் செய்ய வேண்டும். செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து விட்ட பிறகு அதை ஏன் மறைக்க வேண்டும்? அது மட்டுமல்ல. செய்ய நினப்பதை உடனே செய்துவிட வேண்டும். அதை ஒத்திப் போட்டால் பிறகு அதை செய்வதற்கு வாய்ப்பு இல்லாமல் போய்விடக் கூடும். எனவே நம்மால் முடிந்ததை உடனடியாக செய்து விட வேண்டும். அதையும் யாருக்கும் தெரியாமல் மறைக்காமல் செய்து விட வேண்டும். 4. ஈவது விலக்கேல் பிறருக்கு உதவி செய்வதைத்

பூம்புகார் நகரின் சிறப்பு

      தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தொடர்பான செய்திகள், தமிழ்நாட்டில் முறையாக அறிவிக்கப்படவில்லை. 1993 ஆம் ஆண்டில், இந்தியக் கடல் ஆய்வு நிறுவனம் (கோவா) மேற்கொண்ட முதல்கட்ட ஆய்வுகளிலேயே, பூம்புகார் நகரின் சிறப்பு வெளிப்பட்டது. இந்திய அரசின் நிறுவனங்களில் பணியாற்றும் சில தமிழ்ப் பகைவர்களால், இந்த ஆய்வுகள் நிறுத்தப்பட்டன. பணப் பற்றாற்குறை என்று பொய் சொல்லப்பட்டது. 1990-களில், குசராத்தில் உள்ள த ுவாரகையை அகழ்வாய்வு செய்ய, இந்திய அரசு பல கோடிகளைச் செலவிட்டது. அப்போதெல்லாம் பற்றாக்குறை பற்றிய பேச்சு எழவில்லை. துவாரகையில் எதிர்பார்த்த சான்றுகள் கிடைக்கவில்லை. சிந்துவெளிக்கு முந்திய நகரம் துவாரகை (கண்ணன் வாழ்ந்திருந்ததாகச் சொல்லப்படும் நகரம்) என அறிவிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் வெற்றி பெறவில்லை. இந்நிலையில் பூம்புகாரின் ஆய்வுகள் தமிழர்களின் தொன்மையை வெளிப்படுத்தி விடும் என்று சிலர் கருதியதின் விளைவாகவே, ஆய்வுப் பணிகள் நிறுத்தப்பட்டன. தமிழகத்தில் ஆய்வு செய்து எடுக்கப்பட்ட படங்கள் தமிழகத்தில் வெளியிடப் படவில்லை. மாறாக, பெங்களுரில் ஒருநாள் மட்டும் கண்காட்சியில் காட்டப்பட்டது

தொண்டைமானாறு:

தொண்டைமானாறு என்ற பெயரை கேட்டதும் யாழ்பாண குடாநாட்டின் வடகரையில் தொண்டைமானாறு என்ற ஊரும், ஊரின் தென்கோடியில் உள்ள செல்வச்சந்நிதி என்ற இனிய பெயரை உடைய முருகன் ஆலயமும் இந்த இடங்களைத் தெரிந்த ஒருவரின் மனக்கண்முன் தோன்றும். தொண்டைமானாறு என்னும் இவ்விடத்திற்கு பெயர் வரக்காரணம் , தொண்டைமான் மன்னர் ஒருவரின் ஆட்சியின் கீழ் இவ்விடம் இருந்ததே காரணம். இங்கே வந்த தொண்டைமான் அரசன் யார் ?அவன் தமிழ்நாட்டில் எந்த இடத்தில் இருந்து வந்தான் ? எப்போது இங்கு வந்தான் ? வந்த தொண்டைமான் அரசன் என்ன செய்தான் ? போன்ற பல கேள்விகள் நமக்கு எழும். இதற்கான  பதிலை இலங்கை வரலாற்று ஆசிரியர்களால் ஆராய்ந்து எழுதப்பட்ட "தொண்டைமானாரும்  செல்வச்சநிதியும்" என்னும் நூலில் உள்ள செய்தியை உங்களுக்காக இங்கு பகிர்கிறேன். நூல் : தொண்டைமானாரும் செல்வச்சநிதியும் ஆக்கியோன் : சே.நாகலிங்கம் வெளியீடு :  வல்வை வரலாற்று ஆவண காப்பகம் கெனடா தாய்நாட்டுத்  தமிழர்களின் வரலாற்றை பார்க்கும் போது, அங்கே கிபி இரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் காஞ்சிபுரத்தை தலைநகரமாக கொண்டு ஆட்சி செய்த தொண்டைமான் இளந்திரையனும் அவனை தொடர்ந்து , தம