Skip to main content

எனது "கடவுள்"

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவ்ன் முதற்றே உலகு.

- வான் புகழ் வள்ளுவர்.

பொருள்:

அகரம் எழுத்துக்களுக்கு முதன்மை; ஆதிபகவன்,
உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை.

"கடவுள்" ‍~ இதை அவ்வளவு சுலபமாக யாரும் விளக்கிவிடமுடியாது. முதலில் கடவுள் என்பது ஏதோ கற்ப்பனையில் நாம் வடித்துகொண்ட உருவமலல! உருவமில்லாதவற்றை உணரும் திறனில்லாத பாமரனுக்காக வடிக்கப்பட்டதுதான் உருவங்கள்! அதை மேன்மேலும் அழகாக்கி அழகுபார்க்க நினைத்தபோது உருவானதுதான் ஆலயங்கள்! உண்மையில் நாம் அனைத்து கடவுள் உருவங்களயும் ஆராய்ந்து பார்த்தால் தெரியும் அந்த தோற்ற்ங்களின் உண்மையான் அர்த்தம்.. அது அனைத்து உயிரிடத்திலும் மனிதர்களாகிய நாம் அன்போடு பற்றோடு இருக்கவேண்டும். அன்பொன்றே உயிர்களிடத்தில் அடிப்படையானது அது ஒன்றே நம் துன்பங்களிலிருந்து விடுவிக்கவல்ல ஒரு அருமருந்து! அந்த அருமருந்தின் தத்துவங்கள்தான் "கடவுள்" ~ நாம் அதை கண்களால் காணமுடியாது அதை நாம் உணரத்தான் முடியும்.

இன்றைய உலகில் அந்த விலைமதிக்கமுடியாத் அன்பெனும் அருமருந்து வறண்டுகொண்டிருக்கிறது அதன் பயனாகத்தான் நாம் துன்பங்களை அனுபவித்துகொண்டிருக்கிறோம்! அன்பெனும் அருமருந்தினை நாம் நமக்கும் மற்றவர்களுக்கும் செலுத்த முயன்றாலொழிய நாம் துன்பங்களிலுருந்து விடுபடமுடியாது.. கடவுள் இருக்கிறாரா என்பதை உணர்ந்து பார்த்து அறிந்துகொள்! கண்ணால் காண முயலாதே!!


\\ஆராய முடியாத, உணர முடியாத, மனிதனுக்கு புரியாம இருக்ற யாரோ ஒருத்தர கடவுள்னு\\

முடியாததென்பது இல்லை மனிதன் முயலுவதில்லை அது மனிதர்களாகிய நம் குற்றம் பிறகெதற்க்க்கு கடவுளை அன்பை குற்றம் கூறமுடியும்?! சக மனிதர்களை நேசிக்க வேண்டும் என்று உணர்த்துவதுதான் கடவுள்களின் தத்துவும் அதை சரியாக புரிந்துகொள்ளாத, புரிந்தும் அன்பு செலுத்தாத நாம்தான் குற்றவாளிகள்?


//மனிதனக்கு காட்டலாம் உதாரணமாய், இப்படி தான் அன்பை போதிக்க வேண்டும்//

இந்த வாக்கியத்திற்க்கு உங்களுக்கு சரியான பதில் தெரியும் என் நம்புகிறேன்! உங்களது வயது அனுபவம் என்ன? இது வரையில் எத்தகையான் புத்தகங்களை படித்திருக்கிறீர்கள்? நீங்கள் சொல்வதிலிருந்து கடவுள் மனிதனுக்கு அருளிய தத்துவ புத்தகங்கள் யாவும் கரைத்து குடித்து விட்டவர்போலவும் அதில் எதிலுமே மனிதனுக்கு அன்பினை போதிக்கும் தத்துவத்தை சொல்லவில்லை போல இருக்கிறது உங்களது கருத்து. உலகில் எல்லவற்றையுமே ஒவ்வொரு மனிதனும் அனுபவித்துதான் தெரிந்துகொண்டாகவேண்டும் என்றில்லை! அப்படியானால் எவருக்கு வயது போதாது! அதனால்தான் பாமர மக்களாகிய நாம் ஆன்றோர்கள், சான்றோர்கள், பெரியோர்கள், நாயன்மார்கள், ஆழ்வார்கள் போன்றோர்கள் எழுதிய புத்தகங்களின் மூலம் நாம் வாழ்வை, அன்பை நாம் அறிய முடியும்!

யாவற்றையும் அனுபவித்து தெரிந்து கொள்வதற்க்கு உமக்கோ எனக்கோ யாருக்குமோ தன் வாழ்நாள் போதா! அதனால்தான் வாழ்க்கைக்கான் தத்துவத்தை நாம் ஏற்க்கனவே நன்கு ஆராயப்பட்டு அனுபவிக்கப்பட்டு எழுதப்பட்டுள்ள தத்துவ புத்தகங்களை பின்பற்றுகிறோம்!


//இப்படி எழுதினவரே ஒரு மனிதன் தான் , அதனால் அவரே சொல்லிட்டாரு கடவுள் இருக்குரார்னு அப்டின்னு, அதனால கடவுள் இருக்கிறார்னு அப்டின்னு சொல்றது எந்த விதத்துல நியாயம்//

உலகப்பொதுமறை எனவும், கடவுள் மனிதனுக்கு போதித்தது கீதை, மனிதன் மனிதனுக்கு போதித்தது குறள் எனவும், உலக மொழிகளில் இன்றளவும் அதிகமாக மொழிபெயர்க்கப்பட்ட ஒரே புத்தகம் திருக்குறள் ஆகும், எந்த நாட்டிற்க்கு, எந்த மக்களுக்கு, எந்த சூழ்நிலைக்கு, எந்த துறைக்கும் பொருத்தமாக எழுதப்பட்டதென சான்றோர்கள் கூறியிருக்கிறாரகள்! ஆகவே திருவள்ளுவர், புரட்சி கவி பாரதி, கன்னித்தமிழ் தந்த திருவாசகம் போன்ற புத்தகங்களை வாசிக்கிறோம் ஆராய்ந்து அறிந்து அதன்மூலம் நாம் வாழ்க்கைக்கான நெறிகளை பின்பற்றுகிறோம்! ஆகவே எந்த தத்துவமும் நமகெதிராக அல்ல நாம் அதை தவறாக புர்ந்துகொண்டுறுக்கிறோம் ஆகவே நாம் தான் முதல் குற்றவாளி!


"God" is not an object, we can't see this, won't come to us to make us happy like a movie hero!! "God" is a verb we only can feel it. "God" has given/teached us in many ways to be peace life. But all the things above said, we have been made. We only find the way to the peaceful life from that instructed way us by “God”

வான் புகழ் திருவள்ளுவரை மிஞ்சிய எளிமையான தத்துவஞானி எவரும் என்னறிவுக்கு யாருமில்லை!

Comments

Popular posts from this blog

ஒளவையாரின் ஆத்திச்சூடி

1. அறம் செய விரும்பு எப்பொழுதும் நல்ல காரியங்களை மட்டுமே செய்வதற்கு ஆசைப்பட வேண்டும். மறந்தும் மனதால்கூட மற்றவர்களுக்கு கெடுதல் தரும் விஷயங்களைப் பற்றி நினைக்கக் கூடாது. 2. ஆறுவது சினம் கோபம் கொள்ளக் கூடாது. கோபத்தைத் தணிக்க வேண்டும். கோபத்தைக் குறைக்க வேண்டும். கோபம் வரும்போது பேச்சைக் குறைத்துக்கொள்ள வேண்டும். அப்போது எடுக்கும் எந்த முடிவும் சரியாக இருக்காது. கோபம் குறைந்த பிறகு ஆற அமர யோசித்து எடுக்கும் முடிவே சரியாக இருக்கும். எனவே கோபத்தைக் குறைத்துக் கொள்வது சாலச் சிறந்தது. கோபம் கொள்ளாமல் இருப்பது அதைவிட சிறப்பாக இருக்கும்.   3. இயல்வது கரவேல் நம்மால் இயன்றதை ஒளிக்காமல் மறைக்காமல் செய்ய வேண்டும். செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து விட்ட பிறகு அதை ஏன் மறைக்க வேண்டும்? அது மட்டுமல்ல. செய்ய நினப்பதை உடனே செய்துவிட வேண்டும். அதை ஒத்திப் போட்டால் பிறகு அதை செய்வதற்கு வாய்ப்பு இல்லாமல் போய்விடக் கூடும். எனவே நம்மால் முடிந்ததை உடனடியாக செய்து விட வேண்டும். அதையும் யாருக்கும் தெரியாமல் மறைக்காமல் செய்து விட வேண்டும். 4. ஈவது விலக்கேல் பிறருக்கு உதவி செய்வதைத்

பூம்புகார் நகரின் சிறப்பு

      தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தொடர்பான செய்திகள், தமிழ்நாட்டில் முறையாக அறிவிக்கப்படவில்லை. 1993 ஆம் ஆண்டில், இந்தியக் கடல் ஆய்வு நிறுவனம் (கோவா) மேற்கொண்ட முதல்கட்ட ஆய்வுகளிலேயே, பூம்புகார் நகரின் சிறப்பு வெளிப்பட்டது. இந்திய அரசின் நிறுவனங்களில் பணியாற்றும் சில தமிழ்ப் பகைவர்களால், இந்த ஆய்வுகள் நிறுத்தப்பட்டன. பணப் பற்றாற்குறை என்று பொய் சொல்லப்பட்டது. 1990-களில், குசராத்தில் உள்ள த ுவாரகையை அகழ்வாய்வு செய்ய, இந்திய அரசு பல கோடிகளைச் செலவிட்டது. அப்போதெல்லாம் பற்றாக்குறை பற்றிய பேச்சு எழவில்லை. துவாரகையில் எதிர்பார்த்த சான்றுகள் கிடைக்கவில்லை. சிந்துவெளிக்கு முந்திய நகரம் துவாரகை (கண்ணன் வாழ்ந்திருந்ததாகச் சொல்லப்படும் நகரம்) என அறிவிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் வெற்றி பெறவில்லை. இந்நிலையில் பூம்புகாரின் ஆய்வுகள் தமிழர்களின் தொன்மையை வெளிப்படுத்தி விடும் என்று சிலர் கருதியதின் விளைவாகவே, ஆய்வுப் பணிகள் நிறுத்தப்பட்டன. தமிழகத்தில் ஆய்வு செய்து எடுக்கப்பட்ட படங்கள் தமிழகத்தில் வெளியிடப் படவில்லை. மாறாக, பெங்களுரில் ஒருநாள் மட்டும் கண்காட்சியில் காட்டப்பட்டது

தொண்டைமானாறு:

தொண்டைமானாறு என்ற பெயரை கேட்டதும் யாழ்பாண குடாநாட்டின் வடகரையில் தொண்டைமானாறு என்ற ஊரும், ஊரின் தென்கோடியில் உள்ள செல்வச்சந்நிதி என்ற இனிய பெயரை உடைய முருகன் ஆலயமும் இந்த இடங்களைத் தெரிந்த ஒருவரின் மனக்கண்முன் தோன்றும். தொண்டைமானாறு என்னும் இவ்விடத்திற்கு பெயர் வரக்காரணம் , தொண்டைமான் மன்னர் ஒருவரின் ஆட்சியின் கீழ் இவ்விடம் இருந்ததே காரணம். இங்கே வந்த தொண்டைமான் அரசன் யார் ?அவன் தமிழ்நாட்டில் எந்த இடத்தில் இருந்து வந்தான் ? எப்போது இங்கு வந்தான் ? வந்த தொண்டைமான் அரசன் என்ன செய்தான் ? போன்ற பல கேள்விகள் நமக்கு எழும். இதற்கான  பதிலை இலங்கை வரலாற்று ஆசிரியர்களால் ஆராய்ந்து எழுதப்பட்ட "தொண்டைமானாரும்  செல்வச்சநிதியும்" என்னும் நூலில் உள்ள செய்தியை உங்களுக்காக இங்கு பகிர்கிறேன். நூல் : தொண்டைமானாரும் செல்வச்சநிதியும் ஆக்கியோன் : சே.நாகலிங்கம் வெளியீடு :  வல்வை வரலாற்று ஆவண காப்பகம் கெனடா தாய்நாட்டுத்  தமிழர்களின் வரலாற்றை பார்க்கும் போது, அங்கே கிபி இரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் காஞ்சிபுரத்தை தலைநகரமாக கொண்டு ஆட்சி செய்த தொண்டைமான் இளந்திரையனும் அவனை தொடர்ந்து , தம