தமக்கென்று ஒரு தனித்துவத்தை வகுத்து கொண்டு இயங்குவோர் மட்டுமே வெற்றி பெறுகின்றனர் -- முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம்
ஓயாய அறிவுத் தேடல் ஒன்றே மாணவர்களை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும். "நான் அனைத்துக்கும் தகுதியுள்ளவனாகப் பிறந்தேன். நல்லெண்ணங்களோடும், நம்பிக்கையோடும் பிறந்தேன். கனவுகளோடும் சிந்திக்கும் திறனோடும் பிறந்தேன். எனக்கு சிறகுகள் உள்ளன. நான் பறப்பேன், பறப்பேன், பறப்பேன்' என்று உங்களுக்குள் திரும்பத் திரும்ப கூறிக் கொள்ளுங்கள். இந்த புவியில், இளைஞர்களின் ஆற்றல்தான் பெரிய ஆற்றல். இந்தியாவின் சமூக பொருளாதார நிலையை மாற்றும் சக்தி மாணவர்களின் செழுமையான சிந்தனைக்கு மட்டுமே உண்டு. 2020ம் ஆண்டுக்குள் முழுமையான வளர்ச்சியை எட்ட வேண்டும் என்கிற வல்லரசுக் கனவு, இந்தியாவுக்கு உண்டு.
இந்த லட்சியத்தை எட்ட, தனித்துவம், படைப்பாற்றல், புதுமை மற்றும் சுதந்திர சிந்தனைகள் நிறைந்தவர்களாக மாணவர்கள் மாற வேண்டும். பல்பையும், வெளிச்சத்தையும் பார்க்கும்போது தாமஸ் ஆல்வா எடிசனும், விமானங்களைப் பார்க்கும்போது ரைட் சகோதரர்களும், கணிதம் என்றதும் சீனிவாச ராமானுஜமும், "பிளாக் ஹோல்' என்றதும் சுப்ரமணியன் சந்திரசேகரும் நினைவுக்கு வருகின்றனர். இவர்கள் அனைவரும் தனித்துவத்துடன் இயங்கியவர்கள்; தமக்கென்று ஒரு தனித்துவத்தை வகுத்து கொண்டு இயங்குவோர்தான் வெற்றி பெறுகின்றனர்; வரலாறும் கூட அவர்களைத்தான் நினைவு கூர்கின்றது.
பெரிய பெரிய லட்சியங்கள், அறிவுத் தேடல், கடின உழைப்பு, விடா முயற்சி போன்றவை மாணவர்களுக்கு அவசியம். குறுகிய லட்சியங்கள் குற்றமாகவே கருதப்படும். ஒவ்வொருவருக்கும் கனவுகள் வேண்டும்; கனவுகள் படைப்புத்திறனை நோக்கி அழைத்துச் செல்லும். படைப்புத் திறன், சிந்தனையாற்றலை வளர்க்கும். சிந்தனையாற்றல் அறிவை வளர்க்கும்; அறிவுதான் உங்களை உயர்ந்த மனிதர்களாக்கும். எனவே, கனவுகளை வளர்த்துக் கொள்ளுங்கள்!
இந்த லட்சியத்தை எட்ட, தனித்துவம், படைப்பாற்றல், புதுமை மற்றும் சுதந்திர சிந்தனைகள் நிறைந்தவர்களாக மாணவர்கள் மாற வேண்டும். பல்பையும், வெளிச்சத்தையும் பார்க்கும்போது தாமஸ் ஆல்வா எடிசனும், விமானங்களைப் பார்க்கும்போது ரைட் சகோதரர்களும், கணிதம் என்றதும் சீனிவாச ராமானுஜமும், "பிளாக் ஹோல்' என்றதும் சுப்ரமணியன் சந்திரசேகரும் நினைவுக்கு வருகின்றனர். இவர்கள் அனைவரும் தனித்துவத்துடன் இயங்கியவர்கள்; தமக்கென்று ஒரு தனித்துவத்தை வகுத்து கொண்டு இயங்குவோர்தான் வெற்றி பெறுகின்றனர்; வரலாறும் கூட அவர்களைத்தான் நினைவு கூர்கின்றது.
பெரிய பெரிய லட்சியங்கள், அறிவுத் தேடல், கடின உழைப்பு, விடா முயற்சி போன்றவை மாணவர்களுக்கு அவசியம். குறுகிய லட்சியங்கள் குற்றமாகவே கருதப்படும். ஒவ்வொருவருக்கும் கனவுகள் வேண்டும்; கனவுகள் படைப்புத்திறனை நோக்கி அழைத்துச் செல்லும். படைப்புத் திறன், சிந்தனையாற்றலை வளர்க்கும். சிந்தனையாற்றல் அறிவை வளர்க்கும்; அறிவுதான் உங்களை உயர்ந்த மனிதர்களாக்கும். எனவே, கனவுகளை வளர்த்துக் கொள்ளுங்கள்!
நண்பர் முரளி அவர்களே
ReplyDeleteவன்னிய முரசு என்ற பெயரை முதலில் மாற்றிவிடுங்கள். நீங்கள் எல்லோருக்கும் பொதுவான விஷயங்களைத்தான் வெளியிடுகிறீர்கள். வன்னியர்களுக்காக, வன்னியர்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களை மட்டும் பதிவு செய்யவில்லை. பின் ஏன் குறிப்பிட்ட சமுதாயத்தைக் குறிக்கும் வகையில் தலைப்பை வைக்க வேண்டும்.
உங்களது பின்னூட்டத்திற்க்கு நன்றி!
Deleteஆங்! பெயரில் என்ன இருக்கிறது கருத்தினை மட்டும் பாருங்கள்! எந்த பெயரில் எழுதினாளும் உண்மை உண்மைதான ராஜா!?!!