Skip to main content

தாய் மொழியான தமிழ் நிலைக்குமா?


தற்போது உலகில் மக்களால் பேசப்பட்டு வரும் மொழிகள் எண்ணிக்கை 7,000 ஆக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இவைகளில் பாதி , இந் நூற்றாண்ட்டின் இறுதிக்குள் அழிந்து போகும் ஆபத்தில் உள்ளன, என மொழி ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். உண்மையில், ஒவ்வொரு இரண்டு வாரத்திற்கும், ஒரு மொழி பயன்பாடு இல்லாமல் போவதாக கண்டறியப் பட்டுள்ளது.


சில மொழிகள், எஞ்சியுள்ள அம்மொழி பேசும் ஒருவரின் இறப்புடன், உடனடியாக மறைந்து போகின்றன. இதர மொழிகள், இரு மொழி கலாச்சார சூழலில் படிப்படியாக ,அழிந்து போகின்றன. குறிப்பாக, பூர்வீக மொழிகள், பள்ளியில் ஆதிக்கம் செலுத்தும் மொழி, சந்தையில் செல்வாக்கு செலுத்தும் மொழி, தொலைக் காட்சியில் ஆட்சி செய்யும் மொழிகளால், பின்னுக்குத் தள்ளப்படுகின்றன. மிக விரைவாக மொழிகள் அழிந்து போகும் ஐந்து பகுதிகளாக, அண்மையில் ஆய்வுகள் மூலம் அறிய வந்துள்ளது. வடக்கு ஆசுத்திரேலியா, மத்திய தென் அமெரிக்கா, வட அமெரிக்காவின் உயர் பசிபிக் கடற்கரை மண்டலம், கிழக்கு சைபீரியா, ஒக்லகோமா மற்றும் தென் மேற்கு ஐக்கிய அமெரிக்க நாட்டின் பகுதிகள் ஆகும்.


இப்பகுதிகள் அனைத்திலும், பலவகையான மொழிகள் பேசும் பூர்வீகக் குடிகள் சொற்ப எண்ணிக்கையிலேயே உள்ளனர். இவ்வாய்வு, தேசிய நிலநூல் கழகம் மற்றும் அழியும் நிலையில் உள்ள வாழும் மொழிகள் ஆய்வு நிறுவனத்தின், கள ஆய்வு மற்றும் புள்ளி விவரங்களை அடிப்படையாகக் கொண்டது. இக் கண்டுபிடிப்புகள், தேசிய நிலம் மற்றும் மொழி குறித்த வலைப் பதிவில் விவரிக்கப் பட்டுள்ளது ஜாத் மொழி: கவலையில் பழங்குடியினர்..... கோல்கட்டா : உத்தரகண்ட் மாநிலத்தின், ஜாத் பழங்குடி மொழி, கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருவதைக் கண்டு, பழங்குடியினர் செய்வதறியாமல் திகைத்து போயுள்ளனர். உலகமயமாக்கல் உள்ளிட்ட பல்வேறு செயல்களால், சிறுபான்மை மொழிகள் நாள்தோறும் அழிந்து கொண்டே வருகின்றன. சில வாரங்களுக்கு ஒருமுறை, ஒரு சிறுபான்மை மொழி அழிகிறது. யுனெஸ்கோவின், அழிந்து வரும் மொழிகள் அறிக்கை, இன்னும் 50 ஆண்டுகளில் உலகில் பேசப்பட்டு வரும் சிறுபான்மை மொழிகள் 6 ஆயிரத்தில் பாதிக்கு மேல் இருக்காது என்று கூறியுள்ளது.அதே அறிக்கை, இந்தியாவில் உள்ள சிறுபான்மை மொழிகளில் 196 அழியும் தருவாயில் இருப்பதாகவும் எச்சரிக்கை செய்துள்ளது. அந்த பட்டியலில் உத்தரகண்ட்டின் ஜாத் மொழியும் ஒன்று.திபெத் அருகிலுள்ள நேலாங் மற்றும் ஜாதுன் ஆகிய கிராமங்களில், ராங்பா என்ற பழங்குடியினர் வசித்து வந்தனர்.


1962ல் ஏற்பட்ட இந்திய-சீன போரில், அவர்கள் அப்போதைய உத்தரபிரதேச மாநிலத்தின் டுண்டா போன்ற சிறு நகரங்களில் குடியேறினர். ஜாத் மொழி தற்போது 2,000 பேர்களால் மட்டுமே பேசப்பட்டு வருகிறது.இது குறித்து ராங் பா பழங்குடியின வயதானவர்கள் கூறியதாவது:எங்கள் இளைஞர்கள், ஜாத் மொழியைப் பேசத் தயங்குகின்றனர். தாய்மொழியில் அவர்களுக்கு மேலெழுந்த வாரியான அறிவே இருக்கிறது. எங்கள் திருமணம் மற்றும் சுபநிகழ்ச்சிகளில் பாடும் பாடல்கள் கூட மறைந்து வருகின்றன. ஜாத்துக்கு வரி வடிவம் கிடையாது. ஆனால் எங்கள் இளைஞர்கள் மொபைலில் எஸ்.எம்.எஸ்., அனுப்பும் போது ஆங்கிலத்தில் ஜாத்தில் பரிமாறிக் கொள்கின்றனர். அவர்கள் பெரும்பாலும் நகரங்களில் பணியாற்றுகின்றனர். தாங்கள் பழங்குடியினர் என்ற காரணத்தால் தனிமைப்பட அவர்கள் விரும்பவில்லை.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் இந்தியாவில், தமிழகத்தில் 7, கர்நாடகாவில் 6, ம.பி.,யில் 11, பீகாரில் 5, இமாச்சல பிரதேசத்தில் 19, அருணாச்சல் பிரதேசத்தில் 36, உத்தரகண்ட்டில் 12, மே.வங்கத்தில் 10, ஜம்மு காஷ்மீரில் 12 ஆகிய சிறுபான்மை மொழிகள் அழிவின் விளிம்பில் காத்திருக்கின்றன. இம்மொழிகளை பாதுகாப்பதற்காக, மத்திய அரசின், பாரத் பாஷா விகாஸ் யோஜனா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

எனவே நாம் நம் தாய்மொழி தமிழ் மொழியை காப்பாற்ற வேண்டிய நிலையில் உள்ளோம் ....

நாம் குழைந்தைகள் நம்மை mummy daddy என்று கூப்பிடுவதை கண்டிப்புடன் தவிர்ப்பதோடு அம்மாஅப்பா என்று சொல்ல வைப்போம்.....

வாழ்க தமிழ்! வளர்க தமிழகம்!!...

Comments

Popular posts from this blog

ஒளவையாரின் ஆத்திச்சூடி

1. அறம் செய விரும்பு எப்பொழுதும் நல்ல காரியங்களை மட்டுமே செய்வதற்கு ஆசைப்பட வேண்டும். மறந்தும் மனதால்கூட மற்றவர்களுக்கு கெடுதல் தரும் விஷயங்களைப் பற்றி நினைக்கக் கூடாது. 2. ஆறுவது சினம் கோபம் கொள்ளக் கூடாது. கோபத்தைத் தணிக்க வேண்டும். கோபத்தைக் குறைக்க வேண்டும். கோபம் வரும்போது பேச்சைக் குறைத்துக்கொள்ள வேண்டும். அப்போது எடுக்கும் எந்த முடிவும் சரியாக இருக்காது. கோபம் குறைந்த பிறகு ஆற அமர யோசித்து எடுக்கும் முடிவே சரியாக இருக்கும். எனவே கோபத்தைக் குறைத்துக் கொள்வது சாலச் சிறந்தது. கோபம் கொள்ளாமல் இருப்பது அதைவிட சிறப்பாக இருக்கும்.   3. இயல்வது கரவேல் நம்மால் இயன்றதை ஒளிக்காமல் மறைக்காமல் செய்ய வேண்டும். செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து விட்ட பிறகு அதை ஏன் மறைக்க வேண்டும்? அது மட்டுமல்ல. செய்ய நினப்பதை உடனே செய்துவிட வேண்டும். அதை ஒத்திப் போட்டால் பிறகு அதை செய்வதற்கு வாய்ப்பு இல்லாமல் போய்விடக் கூடும். எனவே நம்மால் முடிந்ததை உடனடியாக செய்து விட வேண்டும். அதையும் யாருக்கும் தெரியாமல் மறைக்காமல் செய்து விட வேண்டும். 4. ஈவது விலக்கேல் பிறருக்கு உதவி செய்வதைத்

பூம்புகார் நகரின் சிறப்பு

      தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தொடர்பான செய்திகள், தமிழ்நாட்டில் முறையாக அறிவிக்கப்படவில்லை. 1993 ஆம் ஆண்டில், இந்தியக் கடல் ஆய்வு நிறுவனம் (கோவா) மேற்கொண்ட முதல்கட்ட ஆய்வுகளிலேயே, பூம்புகார் நகரின் சிறப்பு வெளிப்பட்டது. இந்திய அரசின் நிறுவனங்களில் பணியாற்றும் சில தமிழ்ப் பகைவர்களால், இந்த ஆய்வுகள் நிறுத்தப்பட்டன. பணப் பற்றாற்குறை என்று பொய் சொல்லப்பட்டது. 1990-களில், குசராத்தில் உள்ள த ுவாரகையை அகழ்வாய்வு செய்ய, இந்திய அரசு பல கோடிகளைச் செலவிட்டது. அப்போதெல்லாம் பற்றாக்குறை பற்றிய பேச்சு எழவில்லை. துவாரகையில் எதிர்பார்த்த சான்றுகள் கிடைக்கவில்லை. சிந்துவெளிக்கு முந்திய நகரம் துவாரகை (கண்ணன் வாழ்ந்திருந்ததாகச் சொல்லப்படும் நகரம்) என அறிவிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் வெற்றி பெறவில்லை. இந்நிலையில் பூம்புகாரின் ஆய்வுகள் தமிழர்களின் தொன்மையை வெளிப்படுத்தி விடும் என்று சிலர் கருதியதின் விளைவாகவே, ஆய்வுப் பணிகள் நிறுத்தப்பட்டன. தமிழகத்தில் ஆய்வு செய்து எடுக்கப்பட்ட படங்கள் தமிழகத்தில் வெளியிடப் படவில்லை. மாறாக, பெங்களுரில் ஒருநாள் மட்டும் கண்காட்சியில் காட்டப்பட்டது

தொண்டைமானாறு:

தொண்டைமானாறு என்ற பெயரை கேட்டதும் யாழ்பாண குடாநாட்டின் வடகரையில் தொண்டைமானாறு என்ற ஊரும், ஊரின் தென்கோடியில் உள்ள செல்வச்சந்நிதி என்ற இனிய பெயரை உடைய முருகன் ஆலயமும் இந்த இடங்களைத் தெரிந்த ஒருவரின் மனக்கண்முன் தோன்றும். தொண்டைமானாறு என்னும் இவ்விடத்திற்கு பெயர் வரக்காரணம் , தொண்டைமான் மன்னர் ஒருவரின் ஆட்சியின் கீழ் இவ்விடம் இருந்ததே காரணம். இங்கே வந்த தொண்டைமான் அரசன் யார் ?அவன் தமிழ்நாட்டில் எந்த இடத்தில் இருந்து வந்தான் ? எப்போது இங்கு வந்தான் ? வந்த தொண்டைமான் அரசன் என்ன செய்தான் ? போன்ற பல கேள்விகள் நமக்கு எழும். இதற்கான  பதிலை இலங்கை வரலாற்று ஆசிரியர்களால் ஆராய்ந்து எழுதப்பட்ட "தொண்டைமானாரும்  செல்வச்சநிதியும்" என்னும் நூலில் உள்ள செய்தியை உங்களுக்காக இங்கு பகிர்கிறேன். நூல் : தொண்டைமானாரும் செல்வச்சநிதியும் ஆக்கியோன் : சே.நாகலிங்கம் வெளியீடு :  வல்வை வரலாற்று ஆவண காப்பகம் கெனடா தாய்நாட்டுத்  தமிழர்களின் வரலாற்றை பார்க்கும் போது, அங்கே கிபி இரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் காஞ்சிபுரத்தை தலைநகரமாக கொண்டு ஆட்சி செய்த தொண்டைமான் இளந்திரையனும் அவனை தொடர்ந்து , தம