முகநூல் (Facebook)
ஏற்கனவே கூறிய அற்க்கைகளின் படி அமெரிக்காவிலும் பிற சில நாட்டிலும் ஆட்சி மாற்றத்திற்க்கு பெரும் பங்கு வகித்தது இந்த முகநூல் என்பதை நாம் அறிகின்றோம். அந்த அறிக்கைகளின்ன்படி இந்தியாவிலும் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் அதற்க்கு அடுத்துவரும் அனைத்து மாநில தேர்ந்தலிகளும் அதன் தாக்கம் நிச்சயம் இருக்கும் என்றும் நமக்கு தெரியவருகின்றது.
ஆதலால் நாம் முதலில் ஒன்றினை நமது சிந்தையில் நிலைநிறுத்திகொள்ளவேண்டும்.. ஆம், நாம் பொழுதுபோக்கிற்க்கு முகநூலை பயன்படுத்துவதோடு நில்லாமல் நாம் நமது சிந்த்னையை கருத்தினை எண்ணத்தை வெளிப்படுத்துவதற்க்கான ஒரு அறிய வாய்ப்பாகவும் நாம் எடுத்துகொள்ளவேண்டும்..
நாம் நினைத்தால் நாம் சிந்தித்தால் ஒரு புரட்சிக்கான ஒரு சிறு தீயை விதையை நாம் நிச்சயம் மூட்ட முடியும் விதைக்க முடியும் என்பது என்னுடைய கருத்து!!
இத்தகைய நவீன ஊடகஙக்ள் இல்லாத காலகட்டங்களில் பத்திரிக்கை ஊடகம் சமுதாய முன்னோற்றத்தில் அரசியல் மாற்றங்களில் பெரும் தாக்கத்தைனை ஏற்ப்படுத்தியிருக்கின்றதை நாம் மறுக்க இயலாது அதைபோலத்தான் இதுவும் ஆம்.. பத்திரிக்கை என்பது ஒரு சில குறிப்பிட்ட ஆசிரியர் உள்ளிட்ட குழுவின் கருத்துக்களின் ஒட்டுமொத்த தொகுப்பு என சொல்லலாம் ஆனால் முகநூல் என்பது அதைபோன்றதல்ல...இங்கே நல்ல ஒரு சிந்தனையானும் ஒரு பத்திரிக்கைக்கு சமம்.
பேனாவின் முனை வாள்முனையைவிட வலிமையானது என்றொரு சொற்றடர் உள்ளது என்பதை நினைவூட்டிகொள்வோம்..
அதைப்போலத்தான் முற்போக்கு சிந்தனையுள்ள தொலைநோக்கு சிந்தனையுள்ள ஒவ்வொரு சிந்தனையாளனும் ஒரு பேனா முனைதான் ஒரு வாள்முனைபோலத்தான்..!!
ஆதலால் ஆக்கப்பூர்வமாக் சிந்தியுங்கள்! நம் சமுதாயம் மீதும் நமது மொழி, கலாச்சாரம், வரலாறு, பண்டையகால நாகரீகம், கலை, இலக்கியம் மற்றும் சிற்ப்பம் போன்ற விசயங்களில் பற்றுகொள்ளுங்கள் அதின்மீது உங்களது கவனத்தினை திருப்புங்கள் அதன்பொருட்டு உங்களது சிந்தனையை கூர்தீட்டுங்கள் எழுதுங்கள் வெளிப்படுத்துங்கள் பின்பு நீங்களும் ஒரு மிகப்பெரிய சிந்தனையாளர் ஆவது உறுதி!!
உங்களை சுற்றியுள்ள நடைமுறை வாழ்க்கை பிரச்சனைகளை ஆராயுங்கள் அதை நல்ல தமிழ் புலமையோடு எழுதுங்கள்! நீங்களும் ஒரு சிந்தனையாளராக மாறி அவ்வகையான ஒரு புரட்சிக்கு மாற்றத்திற்க்கு வித்திட்டால் அது முகநூலின் உதவில் நமக்கு கிட்டும் மிகப்பெரிய வெற்றியாகும்.
Comments
Post a Comment
உங்களின் கருத்துக்கள் எனக்கு ஊக்கமளிக்கும்