குற்றாலம் நகரில் அருவிகள்தான் பிரதானம் என்றாலும் அங்குள்ள அருங்காட்சியகம் பல்வேறு சிறப்புகளைப் பெற்றுள்ளது. குற்றாலம் பண்பாட்டையும், இந்து மத வழிப்பாட்டையும் தன்னகத்தே தக்க வைத்து கொண்ட சிறப்பு வாய்ந்த பழமையான நகரமாகும்.
குற்றாலத்தின் பழமை:
************************
10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள், பழைய குற்றால அழுதகண்ணி ஆற்றங்கரையில் காணப்படுகின்றன. இந்த ஆற்றங்கரையில் நுண்கற்காலத்தைச் சேர்ந்த மக்கள் பயன்படுத்திய கருவிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
பெருங்கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் பழைய குற்றாலத்திலும், அதனை அடுத்து ஆயிரப்பேரி என்ற கிராமத்திலும் பெருங்கற்கால பண்பாட்டு தடையமாகிய முதுமக்கள் தாழிகளும், கருப்பு, சிவப்பு கலயங்கலும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை பெருங்கற்கால மனிதர்கள் குற்றாலம் பகுதியில் வாழ்ந்ததை உறுதி செய்கின்றன.
திருக்குற்றாலநாதர் கோயிலில் காணப்படும் பாண்டியர், சோழர், நாயக்கர், தென்காசிப் பாண்டியர்கள், திருவிதாங்கூர் மன்னர்கள், ஜமீன்தார்கள் ஆகியோருடைய கல்வெட்டுகள் இவ்வூரில் தொடர்ச்சியான வரலாற்றை உறுதி செய்கின்றன.
இந்த அருங்காட்சியகம் பழைய திருவாங்கூர் மகாராஜா காலத்தில் கட்டப்பட்ட கட்டிடத்தில் செயல்பட்டு வருவது தனிச்சிறப்பாகும். இங்கு சுற்றுவட்டார மாவட்ட பகுதிகளை சேர்ந்த மக்களின் கலாச்சாரம், பண்பாடு மற்றும் வீரத்தை பிரதிபலிக்கும் வகையில் பண்டைய கால பொருட்கள் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன.
இவ்வருங்காட்சியகத்தில் அமைந்துள்ள 9 காட்சி பெட்டிகளில் இவ்வூர் வரலாற்றோடு தொடர்புடைய தொல்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. கி.பி.8ம் நுற்றாண்டில் வணங்கப்பட்ட திருமால் சிலை, இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. கி.பி.10ம் நூற்றாண்டில் பிராம்மி சிலை,இப்படி ஏராளமான அரிய பொக்கிஷங்கள் இங்குள்ளன.
பழங்கால ஓலைச்சுவடிகள்:
*****************************
அகஸ்தியர் மருத்துவ பாடல்கள் அடங்கிய ஓலைசுவடிகள்,கி.பி.16ம் நூற்றாண்டில் உடன்கட்டை ஏறுதல் போன்ற நிகழ்வுகளும் இப்பகுதியில் நடந்தற்க்கான சான்றுகள்,என கி.மு, கி.பி, காலத்து ஓலைசுவடிகள், கல்வெட்டுக்கள், மரச்சிற்பங்கள், நிரம்பப்பெற்றுள்ளன.
பழங்குடியினர் பொருட்கள்:
*****************************
கொண்டை ஊசிகள், மரத்தாலான உரல், பழங்குடியினர் பயன்படுத்திய பொருட்கள், தேன் சேகரிக்கும் மூங்கில் குழல், பீரங்கி குண்டுகள், கி.பி.முதல் நூற்றாண்டு அனுமன், மதுரைவீரன் சிலை, பூஜை பொருட்கள், கி.பி.18ம் நூற்றாண்டு சீனப்பெண் தெய்வம், கி.பி.10ஆம் நூற்றாண்டு கால்சிலம்பு, காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
குற்றாலத்தின் பழமை:
************************
10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள், பழைய குற்றால அழுதகண்ணி ஆற்றங்கரையில் காணப்படுகின்றன. இந்த ஆற்றங்கரையில் நுண்கற்காலத்தைச் சேர்ந்த மக்கள் பயன்படுத்திய கருவிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
பெருங்கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் பழைய குற்றாலத்திலும், அதனை அடுத்து ஆயிரப்பேரி என்ற கிராமத்திலும் பெருங்கற்கால பண்பாட்டு தடையமாகிய முதுமக்கள் தாழிகளும், கருப்பு, சிவப்பு கலயங்கலும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை பெருங்கற்கால மனிதர்கள் குற்றாலம் பகுதியில் வாழ்ந்ததை உறுதி செய்கின்றன.
திருக்குற்றாலநாதர் கோயிலில் காணப்படும் பாண்டியர், சோழர், நாயக்கர், தென்காசிப் பாண்டியர்கள், திருவிதாங்கூர் மன்னர்கள், ஜமீன்தார்கள் ஆகியோருடைய கல்வெட்டுகள் இவ்வூரில் தொடர்ச்சியான வரலாற்றை உறுதி செய்கின்றன.
இந்த அருங்காட்சியகம் பழைய திருவாங்கூர் மகாராஜா காலத்தில் கட்டப்பட்ட கட்டிடத்தில் செயல்பட்டு வருவது தனிச்சிறப்பாகும். இங்கு சுற்றுவட்டார மாவட்ட பகுதிகளை சேர்ந்த மக்களின் கலாச்சாரம், பண்பாடு மற்றும் வீரத்தை பிரதிபலிக்கும் வகையில் பண்டைய கால பொருட்கள் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன.
இவ்வருங்காட்சியகத்தில் அமைந்துள்ள 9 காட்சி பெட்டிகளில் இவ்வூர் வரலாற்றோடு தொடர்புடைய தொல்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. கி.பி.8ம் நுற்றாண்டில் வணங்கப்பட்ட திருமால் சிலை, இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. கி.பி.10ம் நூற்றாண்டில் பிராம்மி சிலை,இப்படி ஏராளமான அரிய பொக்கிஷங்கள் இங்குள்ளன.
பழங்கால ஓலைச்சுவடிகள்:
*****************************
அகஸ்தியர் மருத்துவ பாடல்கள் அடங்கிய ஓலைசுவடிகள்,கி.பி.16ம் நூற்றாண்டில் உடன்கட்டை ஏறுதல் போன்ற நிகழ்வுகளும் இப்பகுதியில் நடந்தற்க்கான சான்றுகள்,என கி.மு, கி.பி, காலத்து ஓலைசுவடிகள், கல்வெட்டுக்கள், மரச்சிற்பங்கள், நிரம்பப்பெற்றுள்ளன.
பழங்குடியினர் பொருட்கள்:
*****************************
கொண்டை ஊசிகள், மரத்தாலான உரல், பழங்குடியினர் பயன்படுத்திய பொருட்கள், தேன் சேகரிக்கும் மூங்கில் குழல், பீரங்கி குண்டுகள், கி.பி.முதல் நூற்றாண்டு அனுமன், மதுரைவீரன் சிலை, பூஜை பொருட்கள், கி.பி.18ம் நூற்றாண்டு சீனப்பெண் தெய்வம், கி.பி.10ஆம் நூற்றாண்டு கால்சிலம்பு, காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
Comments
Post a Comment
உங்களின் கருத்துக்கள் எனக்கு ஊக்கமளிக்கும்