Skip to main content

இன்னும் எத்தனை காலம் பொறுப்பது?

ஏன் இந்த அவல நிலை???

இன்னும் எத்தனை காலம் பொறுப்பது?


"பாராண்ட பல்லவ வம்சம்" நம் வம்சம் ஆனால் இன்று நம் நிலைமைஎன்ன?

தமிழகத்தில் 6 கோடி மக்கள் தொகையில் 2 கோடி மக்களைக் கொண்ட வன்னியர்கள் சுதந்திரம் பெற்று 62 ஆண்டுகளாகியும் அரசு பணியில் நிலையைப் பார்த்தால் வேதனையும், கண்ணீரும்தான் மிஞ்சுகிறது.. நாம் முறையாக அரசால் அங்கீகரீக்கப்பட்டிருக்கிறோமா? எதனால் இந்த அவல நிலைமை? சுதந்திரம் பெற்றபின்பு கூட உழைப்பவன் இன்னும் வறுமையின் பிடியிலிருந்து சுதந்திரம் பெற முடிய இயலவில்லை.. இங்கே ஒரு கடை நிலை கூத்தாடிக்கு கிடைக்கும் அங்கீகாரம் கூட ஒரு விவசாயிக்கு கிடைக்கிறதா என்று சொல்ல எந்த ஒரு தகவலும் சான்றாக இல்லை என்பது தின்னம்.

ஏன் இப்படி ஒரு அவல நிலை? எதை முன்னிட்டு நாம் இப்படி நிற்கிறோம்!! எனக்கு ஒரு உண்மை புலப்படுகிறது.. நம் ஒற்றுமையின்மைதான் என்றுகூட தோன்றுகிறது. இரண்டு கோடிக்கும் மேலான மக்கள் தொகையிருந்தும் அங்கொன்றும் இங்கொன்றுமாக பிறிந்து கிடக்கிறோம்! ஒற்றுமையின் வலிமை தெரிந்தும் நாம் அவரவர்கள் தோன்றும் பாதையில் பயணித்துகொண்டுடிருக்கிறோம்..


இது நம் மக்களின் தவறல்ல என்பது என்னுடைய எண்ணம்....

இங்கே நம்மை ஒன்றினைக்கும் உணர்வு எது? அந்த உணர்வை வளர்க்கதவறியது எது? யார்?


படையாண்ட பல்லவர்கள்
பரதேசி ஆனதென்ன ?

நாடாண்ட நம்மவர்கள்
நடுத்தெருவில் நிற்பதென்ன?

நம் உரிமையை நாம்
பெற கையேந்தி நிற்பதென்ன ?

நம்மை அண்டிப்பிழைதவர்கள்
நம் இனத்தை அழிக்க நினைப்பதென்ன ?

ஆயிரம் ஆயிரம் பட்டபின்னும்
நமக்கு புத்தி வர மறுப்பதென்ன ?

அரசியல் சந்தையிலே நாம்
அடிமாடாய் திரிவதென்ன ?

இத்தனையும் நான் கூறிய பிறகும்
நீங்கள் சிந்திக்காமல் சிரிப்பதென்ன ?

பொறுமைக்கும் எல்லையுண்டு
அதை நீங்கள் மறந்ததென்ன ?

அமைதி காக்கும் நம் பொறுமையிலே
எருமை மாடு மேய்வதென்ன ?


போதும் இந்த இழிநிலை
இனம் காக்க நினைத்திடுவோம்
இன்றே இணைத்திடுவோம் ...!
பத்திஎரியட்டும் வன்னியர் எழுர்ச்சி ... 


- ருத்ரன் வன்னியன்
(நன்றி www.vanniyar.org)

இன்னும் வருவேன் முன்பைவிட வீரியமாக...


Comments

  1. முரளி ,

    எனக்குள்ளும் எப்போதுமுள்ள வினா இது. நீங்கள் தொடங்கியிருக்கின்றீர்கள். நானும் வடம் பிடிக்கிறேன். இன்னும் கரங்கள் சூலும். பலப்படுத்தலாம். பயணப்படலாம்.

    ReplyDelete
  2. உங்களின் கருத்துக்கள் மிகவும் நன்று.

    ReplyDelete
  3. பல்லவர்கள் நீங்களா ,,, ,,,,,,,,,,,அப்போ உங்க வன்னியகுலம் பலவர்கள் அப்படித்தானே ,,,,,,,அப்பா உங்கள் பூர்விக நாடு எது நண்பா ,,,,,,,,,,,,,,,உங்கள் வரலாறுதான் என்ன ,,,,,,,,,

    மனிதன் மேல் அக்கறை வையுங்கள் ,,,,,ஜாதி மேல் வேண்டாம் ,,,,,,,,சுனாமி வந்தால் யாரு எந்த ஜாதி என்று அதற்க்கு தெரியாது நண்பா

    ReplyDelete
  4. yalla vanniyanukum ulla unarvukalai velipaduthungal vetri pera vazhathugal

    ReplyDelete

Post a Comment

உங்களின் கருத்துக்கள் எனக்கு ஊக்கமளிக்கும்

Popular posts from this blog

தமிழன் என்று சொல்லுவோம் தலை நிமிர்ந்து நிற்போம் தமிழை தலை நிமிர்ந்து நிற்க செய்வோம்!!

  துப்பாக்கி,பீரங்கி இல்லாமல் வெறும் வாளும், வில்லும் கொண்டு இமயம் முதல் இன்றைய இந்தோனேசியாவான சுமத்திரை வரை கி.பி 1000 -ல் ஆண்ட ராஜராஜ சோழனையும், திறம் மிகுந்தநெடுஞ்செழியனையும், கரிகாலனையும் சொல்லி வளர்க்காமல் ஒன்றுக்கும் உதவாத முதலாம், இரண்டாம் உலக போர்களை அல்லவா சொல்லி வளர்த்தீர்கள். தமிழனின் சிறப்பை சொல்லி தமிழன் என்று பெருமை கொள்ளும்படி செய்து, மேற்கத்தியர்கள் 5000 ஆண்டுகளுக்கு முன் மொழியற்று காட்டுவாசிகளாய் இருந்த போதே இங்கே கலாச்சாரம் தோன்றி சிலப்பதிகாரமும், குறளும் இயற்ற பட்டு விட்டன என்பதை சொல்லி வளர்த்திருந்தால் இன்று ஏன் இளைஞன் மேற்கு மோகம் கொண்டு அலைகிறான்? இந்த கொடுமைகளுக்கு ஆங்கிலம் படிக்காவிட்டால் இன்றைய சூழ்நிலையில் எந்த துறையிலும் மின்ன முடியாது என்று பதில் வாதம் வைக்கிறார்கள்.இப்படி ஆதாயத்தை முன்னிலைபடுத்தி பற்றையும், பாசத்தையும் புறக்கணிப்பது என்ன நியாயம்?.இந்த பாணியில் ஆதாய நோக்கில் வளரும் பிள்ளைகள் கடைசியில் உங்களை அதே வழியில் பாசத்தை மறந்து முதியோர் இல்லங்களில் தள்ளுகிறார்கள். தாய் மொழியை மதிக்காதவன் எப்படி தாயை மதிப்பான். டையிலும், ஷூவிலும் நீங்கள் ஆரம்...

ஒளவையாரின் ஆத்திச்சூடி

1. அறம் செய விரும்பு எப்பொழுதும் நல்ல காரியங்களை மட்டுமே செய்வதற்கு ஆசைப்பட வேண்டும். மறந்தும் மனதால்கூட மற்றவர்களுக்கு கெடுதல் தரும் விஷயங்களைப் பற்றி நினைக்கக் கூடாது. 2. ஆறுவது சினம் கோபம் கொள்ளக் கூடாது. கோபத்தைத் தணிக்க வேண்டும். கோபத்தைக் குறைக்க வேண்டும். கோபம் வரும்போது பேச்சைக் குறைத்துக்கொள்ள வேண்டும். அப்போது எடுக்கும் எந்த முடிவும் சரியாக இருக்காது. கோபம் குறைந்த பிறகு ஆற அமர யோசித்து எடுக்கும் முடிவே சரியாக இருக்கும். எனவே கோபத்தைக் குறைத்துக் கொள்வது சாலச் சிறந்தது. கோபம் கொள்ளாமல் இருப்பது அதைவிட சிறப்பாக இருக்கும்.   3. இயல்வது கரவேல் நம்மால் இயன்றதை ஒளிக்காமல் மறைக்காமல் செய்ய வேண்டும். செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து விட்ட பிறகு அதை ஏன் மறைக்க வேண்டும்? அது மட்டுமல்ல. செய்ய நினப்பதை உடனே செய்துவிட வேண்டும். அதை ஒத்திப் போட்டால் பிறகு அதை செய்வதற்கு வாய்ப்பு இல்லாமல் போய்விடக் கூடும். எனவே நம்மால் முடிந்ததை உடனடியாக செய்து விட வேண்டும். அதையும் யாருக்கும் தெரியாமல் மறைக்காமல் செய்து விட வேண்டும். 4. ஈவது விலக்கேல் பிறருக்கு உதவி செய்வ...

பூம்புகார் நகரின் சிறப்பு

      தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தொடர்பான செய்திகள், தமிழ்நாட்டில் முறையாக அறிவிக்கப்படவில்லை. 1993 ஆம் ஆண்டில், இந்தியக் கடல் ஆய்வு நிறுவனம் (கோவா) மேற்கொண்ட முதல்கட்ட ஆய்வுகளிலேயே, பூம்புகார் நகரின் சிறப்பு வெளிப்பட்டது. இந்திய அரசின் நிறுவனங்களில் பணியாற்றும் சில தமிழ்ப் பகைவர்களால், இந்த ஆய்வுகள் நிறுத்தப்பட்டன. பணப் பற்றாற்குறை என்று பொய் சொல்லப்பட்டது. 1990-களில், குசராத்தில் உள்ள த ுவாரகையை அகழ்வாய்வு செய்ய, இந்திய அரசு பல கோடிகளைச் செலவிட்டது. அப்போதெல்லாம் பற்றாக்குறை பற்றிய பேச்சு எழவில்லை. துவாரகையில் எதிர்பார்த்த சான்றுகள் கிடைக்கவில்லை. சிந்துவெளிக்கு முந்திய நகரம் துவாரகை (கண்ணன் வாழ்ந்திருந்ததாகச் சொல்லப்படும் நகரம்) என அறிவிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் வெற்றி பெறவில்லை. இந்நிலையில் பூம்புகாரின் ஆய்வுகள் தமிழர்களின் தொன்மையை வெளிப்படுத்தி விடும் என்று சிலர் கருதியதின் விளைவாகவே, ஆய்வுப் பணிகள் நிறுத்தப்பட்டன. தமிழகத்தில் ஆய்வு செய்து எடுக்கப்பட்ட படங்கள் தமிழகத்தில் வெளியிடப் படவில்லை. மாறாக, பெங்களுரில் ஒருநாள் மட்டும் கண்காட்சியில்...