Skip to main content

துடைத்து எறியப்படவேண்டும் இந்த மட்டமான திரைப்பட கலாச்சாரம்

ஒரு கடைக்கோடி கூத்தாடிக்கு கிடைக்கும் முக்கியத்துவமோ, அங்கீகாரமோ நம் நாட்டின் ஓரு சாதாரண ஏழை விவசாயிக்கோ,  ஒரு மீனவனுக்கோ (அ) ஒரு மாணவனுக்கோ கிடைக்குமா?

பணம், (மொக்கை)புகழ் இருக்கிறதென்பதற்க்காக மட்டும் ஏன் கூத்தாடிகளை தலையில் வைத்து தூக்காத குறையாக முக்கியப்படுத்துகிறீர்கள்? அவர்கள் என்னத்தை செய்தார்கள் இந்த் மக்களுக்கு? ஒரு உதாரணம்: கடந்த குறைந்த காற்றழுத்தத்தின் விளைவாக மிகுந்த மழையினை தமிழகம் எதிர்கொண்டது, இதில் நீலகிரியில் பெரும் நிலச்சரிவு, பல வீடுகள் தகர்ந்து தரைமட்டமாயின மேலும் 65 க்கும் மேற்ப்பட்ட மனித உயிர்கள் பலியாயின மேலும் இழப்பு மதிப்பு சுமார் 200 கோடிக்கு மேல் என மதிப்பிடப்பட்டது. அரசும் துரிதமாக மீட்ப்பு பணிகளை முடிக்குவிட்டது, பிற தொண்டு நிறுவனங்களும், தன்னார்வு அமைப்புகளும்  தங்களால் இயன்ற உதவிகளை கொடுப்பதாக அறிவித்தன. மேலும் திருப்பூரை சேர்ந்த சில பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள் ஆயுத்த ஆடைகளை கொடுத்ததாக ஒரு நாளேட்டில் வெளியாகியிருந்தது.

இந்நிகழ்வுகள் இருக்க, உதகையின் இயற்கை பிரதேசங்கள் காட்டி பெரும் தமிழ் திரைப்படங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன இதை யாரும் மறுக்க முடியாது! அதைவைத்து தமிழ் திரைஉலகமும் பெரும் பணம் சம்பாதிதிதுக்கொண்டன. ஆம் என்னுடைய வினா என்னவென்றால்? புயலினால் சேதமான அன்டை மாநிலத்திற்க்கு பல லட்சங்கள் நிதியுதவி அளித்த இந்த திரையுலக கூத்தாடிகள் ஏன் இங்கே உதகையில் ஏற்ப்பட்ட நிலச்சரிவின்போது இவர்க்ளால் எந்த நிதியுதவியும் கொடுக்க மமில்லை அதிலும் தமிழக (தறிகெட்ட‌)இளைஞர்களால் பெரிதும் போற்றப்படும் கூத்தாடிகள் குறைந்த்து ஒரு வெற்றறிக்கைகூட வெளியிடவில்லை என்பது மிகவும் கவலைக்குரியது. அதுவும் மேடைக்குமேடை இவர்கள் தமிழகம்தான் எங்களுக்கு வாழ்வு கொடுத்தது என்று வெட்டி பேச்சுக்கள் பேசுவது அதையும் இந்த மக்கள்.... என்னத்த சொல்லுவது?! யோசித்து பாருங்கள் தமிழக மக்களே கொஞ்சம்!  

ஒரு நடிகை அவள் யார்? அவளின் பூர்வீகம் என்ன? அவள் நாட்டுக்காக என்ன செய்தாள்? அவளால் தமிழ் நாட்டு மக்கள் என்ன பயன் அடைந்தார்கள்.  ஆனால் எளிதாக அவளெல்லாம் நாட்டின் முதலமைச்சரை பார்க்கமுடிகிறது அதைக்கொண்டு அவர்கள் பெரும் கோடிகள் குவித்துவிடுகிறார்கள். 

ஒரு ஏழை விவசாயியோ, மீனவனோ அதை போல உங்களை பார்க்க முடியுமா? அவர்களையும் கூப்பிட்டும் வைத்து படம் எடுப்பீங்களா? என்ன கொடுமை இது? இந்த மட்டமான சுயநலத்தனமான சினிமா கலாச்சாரத்திற்க்கு நாம் ஒரு முடிவு கட்டியாகவேண்டும்.. ஒரு ஆரோக்கியமான சினிமா கலாச்சாரத்தை உருவாக்கவேண்டும். மேடையில் தோன்றும் ஒரு கூத்தாடி சாதாரன் மக்களுக்காக தெருவில் இறங்கிபோராடமுடியுமா? எத்தனையோ நிகழ்வுகள் எடுக்கப்பட்ட இந்த திரையுலகில் ஒரு விவசாயியோ, ஒரு மீனவனோ படும் பாட்டினை உண்மையாக எடுக்க முடியுமா....? இன்னும் எத்தனையோ வினாக்கள்..

தமிழன் எவ்வளவோ படித்து உயர்பதவியில் இருகிறான் இங்கேயும், வெளிநாட்டிலும் ஆனால் சினிமாவையும், அரசியலையும், நாட்டையும் இன்னும் பிரித்து பார்த்து அறிந்துகொள்ளாமல் இருக்கிறான்... இது எங்கே போயி முடியும் என்று தெரியவில்லை..

நாட்டின் முதுகெலும்பான விவசாயிகள், மீனவர்கள் தொடர்ந்து புறக்கணிக்கபடுகிறார்கள்... எந்தெந்த பன்னாடை பரதேசிகளெல்லாம் தொடர்ந்து முன்னிறுத்தப்படுகிறார்கள்.. நினைத்தால் நெஞ்சுபதைக்குது..



இன்னும் வினாவுவேன் முன்பைவிட வீரியமாக...

Comments

  1. நல்ல பதிவு இது. என்னை போன்றவர்களின் மன குமறல் இது .தொடருங்கள்...

    ReplyDelete
  2. கூத்தாடிக்கு தமிழன் தரும் அங்கீகாரம் இதற்கு ஒரு மிகபெரிய காரணம். உங்களை போன்றவர்களின் ஏக்கங்கள் வெளி உலகிற்கு தெரியும் வரை இது தொடர்ந்து கொண்டு தான் இருக்கும்

    ReplyDelete

Post a Comment

உங்களின் கருத்துக்கள் எனக்கு ஊக்கமளிக்கும்

Popular posts from this blog

ஒளவையாரின் ஆத்திச்சூடி

1. அறம் செய விரும்பு எப்பொழுதும் நல்ல காரியங்களை மட்டுமே செய்வதற்கு ஆசைப்பட வேண்டும். மறந்தும் மனதால்கூட மற்றவர்களுக்கு கெடுதல் தரும் விஷயங்களைப் பற்றி நினைக்கக் கூடாது. 2. ஆறுவது சினம் கோபம் கொள்ளக் கூடாது. கோபத்தைத் தணிக்க வேண்டும். கோபத்தைக் குறைக்க வேண்டும். கோபம் வரும்போது பேச்சைக் குறைத்துக்கொள்ள வேண்டும். அப்போது எடுக்கும் எந்த முடிவும் சரியாக இருக்காது. கோபம் குறைந்த பிறகு ஆற அமர யோசித்து எடுக்கும் முடிவே சரியாக இருக்கும். எனவே கோபத்தைக் குறைத்துக் கொள்வது சாலச் சிறந்தது. கோபம் கொள்ளாமல் இருப்பது அதைவிட சிறப்பாக இருக்கும்.   3. இயல்வது கரவேல் நம்மால் இயன்றதை ஒளிக்காமல் மறைக்காமல் செய்ய வேண்டும். செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து விட்ட பிறகு அதை ஏன் மறைக்க வேண்டும்? அது மட்டுமல்ல. செய்ய நினப்பதை உடனே செய்துவிட வேண்டும். அதை ஒத்திப் போட்டால் பிறகு அதை செய்வதற்கு வாய்ப்பு இல்லாமல் போய்விடக் கூடும். எனவே நம்மால் முடிந்ததை உடனடியாக செய்து விட வேண்டும். அதையும் யாருக்கும் தெரியாமல் மறைக்காமல் செய்து விட வேண்டும். 4. ஈவது விலக்கேல் பிறருக்கு உதவி செய்வதைத்

பூம்புகார் நகரின் சிறப்பு

      தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தொடர்பான செய்திகள், தமிழ்நாட்டில் முறையாக அறிவிக்கப்படவில்லை. 1993 ஆம் ஆண்டில், இந்தியக் கடல் ஆய்வு நிறுவனம் (கோவா) மேற்கொண்ட முதல்கட்ட ஆய்வுகளிலேயே, பூம்புகார் நகரின் சிறப்பு வெளிப்பட்டது. இந்திய அரசின் நிறுவனங்களில் பணியாற்றும் சில தமிழ்ப் பகைவர்களால், இந்த ஆய்வுகள் நிறுத்தப்பட்டன. பணப் பற்றாற்குறை என்று பொய் சொல்லப்பட்டது. 1990-களில், குசராத்தில் உள்ள த ுவாரகையை அகழ்வாய்வு செய்ய, இந்திய அரசு பல கோடிகளைச் செலவிட்டது. அப்போதெல்லாம் பற்றாக்குறை பற்றிய பேச்சு எழவில்லை. துவாரகையில் எதிர்பார்த்த சான்றுகள் கிடைக்கவில்லை. சிந்துவெளிக்கு முந்திய நகரம் துவாரகை (கண்ணன் வாழ்ந்திருந்ததாகச் சொல்லப்படும் நகரம்) என அறிவிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் வெற்றி பெறவில்லை. இந்நிலையில் பூம்புகாரின் ஆய்வுகள் தமிழர்களின் தொன்மையை வெளிப்படுத்தி விடும் என்று சிலர் கருதியதின் விளைவாகவே, ஆய்வுப் பணிகள் நிறுத்தப்பட்டன. தமிழகத்தில் ஆய்வு செய்து எடுக்கப்பட்ட படங்கள் தமிழகத்தில் வெளியிடப் படவில்லை. மாறாக, பெங்களுரில் ஒருநாள் மட்டும் கண்காட்சியில் காட்டப்பட்டது

தொண்டைமானாறு:

தொண்டைமானாறு என்ற பெயரை கேட்டதும் யாழ்பாண குடாநாட்டின் வடகரையில் தொண்டைமானாறு என்ற ஊரும், ஊரின் தென்கோடியில் உள்ள செல்வச்சந்நிதி என்ற இனிய பெயரை உடைய முருகன் ஆலயமும் இந்த இடங்களைத் தெரிந்த ஒருவரின் மனக்கண்முன் தோன்றும். தொண்டைமானாறு என்னும் இவ்விடத்திற்கு பெயர் வரக்காரணம் , தொண்டைமான் மன்னர் ஒருவரின் ஆட்சியின் கீழ் இவ்விடம் இருந்ததே காரணம். இங்கே வந்த தொண்டைமான் அரசன் யார் ?அவன் தமிழ்நாட்டில் எந்த இடத்தில் இருந்து வந்தான் ? எப்போது இங்கு வந்தான் ? வந்த தொண்டைமான் அரசன் என்ன செய்தான் ? போன்ற பல கேள்விகள் நமக்கு எழும். இதற்கான  பதிலை இலங்கை வரலாற்று ஆசிரியர்களால் ஆராய்ந்து எழுதப்பட்ட "தொண்டைமானாரும்  செல்வச்சநிதியும்" என்னும் நூலில் உள்ள செய்தியை உங்களுக்காக இங்கு பகிர்கிறேன். நூல் : தொண்டைமானாரும் செல்வச்சநிதியும் ஆக்கியோன் : சே.நாகலிங்கம் வெளியீடு :  வல்வை வரலாற்று ஆவண காப்பகம் கெனடா தாய்நாட்டுத்  தமிழர்களின் வரலாற்றை பார்க்கும் போது, அங்கே கிபி இரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் காஞ்சிபுரத்தை தலைநகரமாக கொண்டு ஆட்சி செய்த தொண்டைமான் இளந்திரையனும் அவனை தொடர்ந்து , தம