Skip to main content

எங்கே செல்கிறது ஊடங்களின் பாதை/ நோக்கம்?!

கலாச்சார சீரழிவு. விசயங்கள் அனைத்தும் அதிர்ச்சிகொள்ளும்வகையில் உள்ளது. ஆம் கலாச்சாரம் சீரழிந்துதான் உள்ளது அதிலும் கொடுமை என்னவென்றால் பெரும் பல‌ கோடிகளும் செல்வாகுகளும் கொண்டவர்களே அதை செய்கிறார்கள் வசதியான வீட்டுபையன் திருடுவதுபோல. இன்று இளைஞர்களையும் சிறுவர்களையும் வெகுவாக அடிமைபடுத்தி அவர்களை அவைகளின் ஆளுமையின் கீழ் வைத்துள்ளன ஊடகங்கள் அவைகளுள் முதன்மையானவைகள் திரைப்படம், வார இதழ்கள் மற்றும் தொலைக்காட்சி இங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது ஒருவனது தனிப்பட்ட உள் எண்ணங்கள் வைத்துக்கொள்வோம் தற்பொழுதிய சூழ்நிலையில். ஆம் சமுதாய அக்கரையோடும், அறிவுசார்ந்த விசயங்களை கொண்டுசெல்லும் பெரும்பொறுப்புகள் மேற்க்கண்ட ஊடகங்க்ளுக்கு இருக்கிறது இல்லையென்று சொல்லிவிடமுடியாது ஏனென்றால் இன்று ஏறக்குறைய இவைகளை கடக்காத எவரும் இருக்கமுடியாதென்று அடித்து சொல்லலாம் அப்படியிருக்க பொறுப்போடு செய்திகளை, கருத்துக்களை வெளிவிடவேண்டும்.

ஆனால் இன்று அப்படியல்ல நிலமை, முதலில் திரைப்படத்திற்க்கு வருவோம் இன்றைய இளைஞர்கள் பட்டாலம் தங்களது தாய் தந்தையரின் புகைப்பட்ங்களை வைத்திருக்கிறார்களோ இல்லையோ ஆனால் கண்டிப்பாக கூத்தாடி ஒருவரின் புகைப்படத்தை வைத்திருப்பார்கள் அந்த அளவுக்கு அவர்கள் மட்டமான் ஒரு விசயத்தை சாதாரண நிகழ்வாக செய்துவிட்டார்கள். அதற்க்கு ஒரு சில பெற்றோர்களே அதரவு!! திருடு என்பதையே சுட்டுவிடு என்று (அ)நாகரீகமாக சொன்னதது இந்த திரைப்படம்தான். எங்கே போகிறது இளைய சமுதாயம்?! ஒரு கூத்தாடி, புகழ் உச்சானிக்கொம்பில் இருக்கும் ஒரு நட்ச்சத்திர நடிகர் அவருக்கு காவடிதூக்கும் பெரும் கூட்டம்கூட அவரை பின்பற்றிகொண்டு இருக்கிறது என்றுகூட கூறலாம் அவர் ஒரு படத்தில் வந்தார்(நடிக்கவில்லை) மிகவும் உயர்ந்த நிலையில் இருக்கும் அந்த நடிகா சர்வசாதாரணமாக முதல்வரைக்கூட சந்திக்கும் அந்தஸ்து கொண்ட அந்த‌ கூத்தாடி, அந்த படத்தில் கேவலமான இரட்டை அர்த்தங்கள் கொண்ட வசனங்களை ஏற்று நடித்திருப்பார் தன்னை மகா ஞானி என்றும் சொல்லும் இவர் தனக்கு கல்யாண வயதில் மகள்கள் இருக்கிறார் என்பதைக்கூட அவர் மறந்து மோசமான காரியத்தை செய்திருக்கிறார்?! ஒரு பெரிய அந்தஸத்தில் இருக்கும் கூத்தாடிக்கு ஒரு பொறுப்பு வேண்டாம? வெறும் பணத்திற்க்காகத்தான் என்றால் பணம் அவரிடம் இல்லாததா?! கூறுங்கள் யாரவது தெரிந்தால்?!

இரண்டாவது காணொளி கூடகம் எனப்படும் தொலைக்காட்சி அலைவரிசைகள்: ஊடகங்களிலே அதிக சக்திமிக்க ஊடகம் தொலைக்காட்சி எனலாம் இலட்ச்சக்கணக்கான வாடிக்கையாளர்களை கொண்டது உலகம்முழுவதும். அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்றால், ஒரு பெரும் தொலைகாட்சி அலைவரிசைகளை கொண்ட ஒரு குழுமம், மக்களையோ, இளைஞர்களையோ, சமுதாயத்தையோ அவ்ர்கள் எள்ளள‌வும் கண்டுகொண்டதாக தெரியவில்லை என்பதை சமீபத்தைய ஒரு ஒளிபரப்பு அதை உறுதிசெய்கிறது. அது இதுதான், கடந்த மாதம் மும்பையில் கடந்த ஒருவருடத்திற்க்கு பிறகு புனேயில் குண்டுவெடித்தது அதை அனைத்து ஆங்கில சேனல்களும் திரும்ப திரும்ப காண்பித்தார்கள் மக்களை விழிப்புற செய்யக்கூடிய நிகழ்வு மேலும் வரவேற்க்ககூடியது அது. அசேசமயம் தமிழ் சேனல்கள் ஒவ்வொன்றாக வலம் வந்தபோழுது எந்த ஒரு தமிழ் சேனல்களிலும் அது ஒளிபரப்பப்படவில்லை மீடியாவின் ராஜா என்று சொல்லிதிரியும் அந்த பெரிய நெட்வொக்கில்கூட ஒளிபரப்பாகவில்லை. ஆனால் அதை காண்பிக்காத அதே சேனல் போன வாரம் ஒரு காணொளியினை ஒளிபரப்பு செய்தது அதுவும் கொஞசம் கூட எடிட் செய்யாமல் அவர்களது படத்தைக்கூட எடிட்செய்து வெளியிடும் அவர்க்ள் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பசெய்து குடும்பத்தோடு பார்த்துகொண்டிருப்பவர்களை கூசவைத்தது.. அன்று குண்டுவெடிப்பு ஒரு செய்தி அதுவும் ம்றுநாள் செய்தியோடு ஒளிபரப்பிய அந்த சேனல் இதைமட்டும் கொஞசம்கூட பொறுப்பில்லாமல் திரும்ப திரும்ப ஒளிபரப்பு செய்கின்றது எங்கே செல்கிறது அவர்களது நோக்கம் மக்களை கீழ்த்தரமான எண்ணங்களை உசுப்பேற்றுவது போன்ற நிகழ்ச்சிகளை மட்டுமே அக்குழுமம் தீவிரம்காட்டுகிறது அதன் மூலம் தனது கல்லா நிறைந்தால் போதும் என்று குறுகிய மனப்பாண்மையோடுயிருக்கிறது. ஏன் இவர்களாம் ஒரு டிஸ்கவரி, ஹிஸ்டரி, நேட்கியோ போன்ற ஒரு அலைவரியை ஏற்ப்படுத்தமுடியாது?! பணமில்லைய இல்லை செல்வாக்கில்லையா? இருக்கிறது அவர்களுக்கு சமுதாயத்தின்பால் மக்க்ளின்பால் அக்கரை இல்லை.

அடுத்துவருவோம் வாரயிதழ்கள்!! இன்றையா வார இதழ்கள் அனைத்தும் நல்ல விசயங்களை கருத்துக்களை வெளியிடாமல் கூத்தாடிகளின் அந்தரங்கத்திலிருந்து அவர்களின் அம்பலம் வரை ஒவ்வொரு செய்திகளை இன்ஞ் இன்ஞ்சாக தெரிந்துவைத்து வெளியிடுகிறாக்ள். பக்கத்திற்க்கு பக்கம் அவர்களின் டேட்டா பேஸைத்தான் வெளியிடுகிறாகள் இவைகளை தெரிந்து மக்களுக்கு சமுதாயத்திற்க்கு என்ன பயன்? இவர்களுக்கு அதிக பிரதிகள் விற்க்கவேண்டும் என்பதற்க்காகந் மிகவும் கீழ்த்தரமான செய்திகளை வெளியிடவும் தயாராகிவிட்டார்கள். புதிதாக ஒரு வார இதழ் வந்தது புதியதலைமுறை என்ற பெயரோடு அது வெளிவந்த சில மாதங்களிலேயே பல இலட்ச்சம் பிரதிகளை தாண்டிவிட்டதாக கேள்வி. அதற்க்கு அவர்கள் சினிமா சம்பந்தமாக ஒரே ஒரு பக்கம்தான் அதுவும் கலைஞர்களை ஊக்கிவிக்கு நோக்கில் வெளியிடுகிறார்கள். அதை நாம் வாரயிதழ் என்று சொல்லலாம்?! இதழ்கள் முழுவதும் அவ்வள்வு கருத்துக்கள் மக்களுக்கு சமுதாயத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மாற்று கருத்து இருந்தால் கூறுங்கள்?!

இவ்வகையில் மக்களை, இளைஞர்களை, சமுதாயத்தை பெருவாரியாக சென்றடையும் மேற்க்க்ண்ட ஊடகங்கள் எங்கே சென்றுகொண்டிருக்கிறது? அவர்களின் நோக்கம் பணம் மட்டும்தானா? அவற்றையும் தாண்டி வரமுடியாதா? விடைதெரிந்தால் சொல்லுங்கள்?!

Comments

  1. ஊடகங்டகள் எல்லாம் ஒரே மாதிரியில்ல மனிதர்கள் எல்லோரும் ஒரே மாதிரியில்ல

    ReplyDelete
  2. நான் எல்லா ஊடங்களையும் சொல்லவில்லை நண்பரே! இங்கே தமிழகத்தில் பெரும்பாலும் அப்படித்தான் தற்பொழுது செயல்படுகின்றன.. அதை யாரும் மறுக்கமுடியாது!

    ReplyDelete
  3. மிகச்சரியானது ஆனால் கோடிகனக்கானோர் உபயோகிக்கும் மீடியாவை சில பேர் மட்டுமே உபயோகிக்கும் வலைப்பபூக்கள் மூலம் விமர்சிப்பதால் மாற்றம் நிகழாது என்பதே என் கருத்து

    ReplyDelete
  4. மிகச்சரியானது ஆனால் கோடிகனக்கானோர் உபயோகிக்கும் மீடியாவை சில பேர் மட்டுமே உபயோகிக்கும் வலைப்பபூக்கள் மூலம் விமர்சிப்பதால் மாற்றம் நிகழாது என்பதே என் கருத்து

    ReplyDelete
  5. நன்றி நண்பர் கலைவாணன் அவர்களுக்கு! நாம் நமக்குதெரிந்த நம் கண்முன்னால் நடக்கும் சம்பவத்தின் அடிப்படையில் விமர்சிப்போம்! நம்மால் முடிந்த சங்கை ஊதிவைபோம் அது கேட்கிற வரையில் கேட்கட்டும்!!

    உலகின் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் அநியாயத்தைக் கண்டு உங்கள் மனம் கொதித்தால்
    நாம் இருவரும் தோழர்களே - சேகுவேரா

    மேற்க்கண்ட கருத்தை நீவீர் ஆதரிப்பவரானால் நான் செய்ததும் அப்படியே!!

    ReplyDelete
  6. first intha cigar,drinks,sex nu tamil movies uh direct pandravangala naduu road la nikka vechi sudanum..apathan namala matheri youths olunga padipanga...

    ReplyDelete
  7. //நம்மால் முடிந்த சங்கை ஊதிவைபோம் அது கேட்கிற வரையில் கேட்கட்டும்!! //

    முரளி,

    உண்மையானச் சொல்.

    சிந்தனையைத் தூண்டும் பதிவு.

    ReplyDelete
  8. நன்றி நண்பரே! உங்களது கனிவான் பதிவிற்க்கு!!

    ReplyDelete
  9. அருமையான பதிவு ... தொடரட்டும் உங்கள் பணி...

    ReplyDelete
  10. நன்றி செங்கதிரோன்! உங்கள் கருத்துக்கள் எனக்கு மேலும் எழுத‌ ஊக்கமளிக்கும்!!

    ReplyDelete
  11. இணையத்தில் வன்னியர்களுக்கு எதிரான பிரச்சாரம்

    1.

    http://dondu.blogspot.com/2010/05/blog-post_1924.html

    2.

    https://www.blogger.com/comment.g?blogID=9067462&postID=3602178630371023243

    ReplyDelete
  12. இணையத்தில் வன்னியர்களுக்கு எதிரான பிரச்சாரம்

    1.

    http://dondu.blogspot.com/2010/05/blog-post_1924.html

    2.

    https://www.blogger.com/comment.g?blogID=9067462&postID=3602178630371023243

    ReplyDelete
  13. //அது இதுதான், கடந்த மாதம் மும்பையில் கடந்த ஒருவருடத்திற்க்கு பிறகு புனேயில் குண்டுவெடித்தது அதை அனைத்து ஆங்கில சேனல்களும் திரும்ப திரும்ப காண்பித்தார்கள் மக்களை விழிப்புற செய்யக்கூடிய நிகழ்வு மேலும் வரவேற்க்ககூடியது அது.

    அசேசமயம் தமிழ் சேனல்கள் ஒவ்வொன்றாக வலம் வந்தபோழுது எந்த ஒரு தமிழ் சேனல்களிலும் அது ஒளிபரப்பப்படவில்லை மீடியாவின் ராஜா என்று சொல்லிதிரியும் அந்த பெரிய நெட்வொக்கில்கூட ஒளிபரப்பாகவில்லை.

    ஆனால் அதை காண்பிக்காத அதே சேனல் போன வாரம் ஒரு காணொளியினை ஒளிபரப்பு செய்தது அதுவும் கொஞசம் கூட எடிட் செய்யாமல் அவர்களது படத்தைக்கூட எடிட்செய்து வெளியிடும் அவர்க்ள் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பசெய்து குடும்பத்தோடு பார்த்துகொண்டிருப்பவர்களை கூசவைத்தது.. அன்று குண்டுவெடிப்பு ஒரு செய்தி அதுவும் ம்றுநாள் செய்தியோடு ஒளிபரப்பிய அந்த சேனல் இதைமட்டும் கொஞசம்கூட பொறுப்பில்லாமல் திரும்ப திரும்ப ஒளிபரப்பு செய்கின்றது எங்கே செல்கிறது அவர்களது நோக்கம் மக்களை கீழ்த்தரமான எண்ணங்களை உசுப்பேற்றுவது போன்ற நிகழ்ச்சிகளை மட்டுமே அக்குழுமம் தீவிரம்காட்டுகிறது அதன் மூலம் தனது கல்லா நிறைந்தால் போதும் என்று குறுகிய மனப்பாண்மையோடுயிருக்கிறது. //

    இது ஒரு நல்ல குறிப்பு(observation). சரியாக கவனித்து சுட்டிக் காட்டி இருக்கிறீர்கள். மக்களுக்கு மாற்று பொழுது போக்கு நிகழ்ச்சியாக நல்ல நாடகங்களை, கூத்துக்களை கொண்டு செல்ல வேண்டும்.

    ReplyDelete

Post a Comment

உங்களின் கருத்துக்கள் எனக்கு ஊக்கமளிக்கும்

Popular posts from this blog

ஒளவையாரின் ஆத்திச்சூடி

1. அறம் செய விரும்பு எப்பொழுதும் நல்ல காரியங்களை மட்டுமே செய்வதற்கு ஆசைப்பட வேண்டும். மறந்தும் மனதால்கூட மற்றவர்களுக்கு கெடுதல் தரும் விஷயங்களைப் பற்றி நினைக்கக் கூடாது. 2. ஆறுவது சினம் கோபம் கொள்ளக் கூடாது. கோபத்தைத் தணிக்க வேண்டும். கோபத்தைக் குறைக்க வேண்டும். கோபம் வரும்போது பேச்சைக் குறைத்துக்கொள்ள வேண்டும். அப்போது எடுக்கும் எந்த முடிவும் சரியாக இருக்காது. கோபம் குறைந்த பிறகு ஆற அமர யோசித்து எடுக்கும் முடிவே சரியாக இருக்கும். எனவே கோபத்தைக் குறைத்துக் கொள்வது சாலச் சிறந்தது. கோபம் கொள்ளாமல் இருப்பது அதைவிட சிறப்பாக இருக்கும்.   3. இயல்வது கரவேல் நம்மால் இயன்றதை ஒளிக்காமல் மறைக்காமல் செய்ய வேண்டும். செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து விட்ட பிறகு அதை ஏன் மறைக்க வேண்டும்? அது மட்டுமல்ல. செய்ய நினப்பதை உடனே செய்துவிட வேண்டும். அதை ஒத்திப் போட்டால் பிறகு அதை செய்வதற்கு வாய்ப்பு இல்லாமல் போய்விடக் கூடும். எனவே நம்மால் முடிந்ததை உடனடியாக செய்து விட வேண்டும். அதையும் யாருக்கும் தெரியாமல் மறைக்காமல் செய்து விட வேண்டும். 4. ஈவது விலக்கேல் பிறருக்கு உதவி செய்வதைத்

பூம்புகார் நகரின் சிறப்பு

      தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தொடர்பான செய்திகள், தமிழ்நாட்டில் முறையாக அறிவிக்கப்படவில்லை. 1993 ஆம் ஆண்டில், இந்தியக் கடல் ஆய்வு நிறுவனம் (கோவா) மேற்கொண்ட முதல்கட்ட ஆய்வுகளிலேயே, பூம்புகார் நகரின் சிறப்பு வெளிப்பட்டது. இந்திய அரசின் நிறுவனங்களில் பணியாற்றும் சில தமிழ்ப் பகைவர்களால், இந்த ஆய்வுகள் நிறுத்தப்பட்டன. பணப் பற்றாற்குறை என்று பொய் சொல்லப்பட்டது. 1990-களில், குசராத்தில் உள்ள த ுவாரகையை அகழ்வாய்வு செய்ய, இந்திய அரசு பல கோடிகளைச் செலவிட்டது. அப்போதெல்லாம் பற்றாக்குறை பற்றிய பேச்சு எழவில்லை. துவாரகையில் எதிர்பார்த்த சான்றுகள் கிடைக்கவில்லை. சிந்துவெளிக்கு முந்திய நகரம் துவாரகை (கண்ணன் வாழ்ந்திருந்ததாகச் சொல்லப்படும் நகரம்) என அறிவிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் வெற்றி பெறவில்லை. இந்நிலையில் பூம்புகாரின் ஆய்வுகள் தமிழர்களின் தொன்மையை வெளிப்படுத்தி விடும் என்று சிலர் கருதியதின் விளைவாகவே, ஆய்வுப் பணிகள் நிறுத்தப்பட்டன. தமிழகத்தில் ஆய்வு செய்து எடுக்கப்பட்ட படங்கள் தமிழகத்தில் வெளியிடப் படவில்லை. மாறாக, பெங்களுரில் ஒருநாள் மட்டும் கண்காட்சியில் காட்டப்பட்டது

தொண்டைமானாறு:

தொண்டைமானாறு என்ற பெயரை கேட்டதும் யாழ்பாண குடாநாட்டின் வடகரையில் தொண்டைமானாறு என்ற ஊரும், ஊரின் தென்கோடியில் உள்ள செல்வச்சந்நிதி என்ற இனிய பெயரை உடைய முருகன் ஆலயமும் இந்த இடங்களைத் தெரிந்த ஒருவரின் மனக்கண்முன் தோன்றும். தொண்டைமானாறு என்னும் இவ்விடத்திற்கு பெயர் வரக்காரணம் , தொண்டைமான் மன்னர் ஒருவரின் ஆட்சியின் கீழ் இவ்விடம் இருந்ததே காரணம். இங்கே வந்த தொண்டைமான் அரசன் யார் ?அவன் தமிழ்நாட்டில் எந்த இடத்தில் இருந்து வந்தான் ? எப்போது இங்கு வந்தான் ? வந்த தொண்டைமான் அரசன் என்ன செய்தான் ? போன்ற பல கேள்விகள் நமக்கு எழும். இதற்கான  பதிலை இலங்கை வரலாற்று ஆசிரியர்களால் ஆராய்ந்து எழுதப்பட்ட "தொண்டைமானாரும்  செல்வச்சநிதியும்" என்னும் நூலில் உள்ள செய்தியை உங்களுக்காக இங்கு பகிர்கிறேன். நூல் : தொண்டைமானாரும் செல்வச்சநிதியும் ஆக்கியோன் : சே.நாகலிங்கம் வெளியீடு :  வல்வை வரலாற்று ஆவண காப்பகம் கெனடா தாய்நாட்டுத்  தமிழர்களின் வரலாற்றை பார்க்கும் போது, அங்கே கிபி இரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் காஞ்சிபுரத்தை தலைநகரமாக கொண்டு ஆட்சி செய்த தொண்டைமான் இளந்திரையனும் அவனை தொடர்ந்து , தம