Skip to main content

அன்னா ஹஸாரே கைது


இந்திய ஜனநாயக நாட்டில் அகிம்சை வழியில் போராடிகொண்டிருக்கிற ஒரு ஒப்பற்ற தியாகி அன்னா ஹஸாரே வினை கைது செய்திருப்பதன்மூலாம் ஊழலால் கரைபட்டுகொண்டிருக்கும் காங்கிரஸின் கபடபுத்தி தெள்ளதெளிவாகிறது!

இந்த நூற்றாண்டின் மிகவும் சக்திவாய்ந்த போராட்டமாக அண்ணல் காந்தியடிகள் மேற்கொண்ட சுதந்திரபோராட்டத்தினை டைம் பத்திரிக்கை சுட்டிகாட்டியது அவ்வழியில் காந்தியவாதியான திரு அன்னா அவர்களின் உண்ணாவிரத போராட்டத்திற்க்கு அனுமதி மறுத்தும் அவரை கைதுசெய்திருப்பதும் நாட்டில் குடிமக்களின் ஜனநாயக உரிமை பறிக்கப்பட்டிருக்கிறது அப்படி அவரொன்றும் அவரது சொந்த நலனுக்காக போராடவில்லை நாட்டையே உலுக்கிகொண்டிருக்கும் ஊழல் என்று கிருமியினை வலுவான சட்டம்கொண்டு அழிக்க வேண்டு மென்பது அவரதுமட்டுமல்ல அவரைப்போன்ற தூயள்ளம் கொண்ட இந்தியர்களின் எண்ணமாக கொண்டுதான் போராடுகிறார்.

சுமார் அறுபது ஆண்டுகாலாமாக ஆட்சிகட்டிலில் கோலோச்சிகொண்டிருக்கும் இந்த காங்கிரஸ் கட்சியில்தான் போபார்ஸ் ஊழலிருந்து தொடங்கி இன்று ஸ்பெக்ரம், ஆதர்ஸ் குடியிருப்பு, காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் என பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது! இந்த காங்கிரஸ் ஆட்சியிருக்கும் வரை இந்திய திருநாடு எந்த வலுவான் வளர்ச்சியினையும் காணமுடியாது இவர்களுக்கு எள்ளலவும் கூட நாட்டுபற்று கிடையாது அவர்களின் ஒரே நோகமெல்லாம் ஒருவரை கைப்பாவையாகக்கொண்டு வேறொருவரை பிரதராக்குவதுதான். மேலும் இவர்கள் ஆட்சி தொடர்ந்தால் அண்டை நாடுகளெல்லாம் நம்மை சீண்டிப்பார்பதோடில்லாமல் ஏளனமாகவும் பார்க்கதொடங்கிவிடுவார்கள்! இந்தியாவால் சுதந்திரநாடான வங்காள தேசம்கூட நம்மை சீன்டிப்பார்த்தாலும் ஆட்சியப்படுவதிற்க்கில்லை!

ஆதலால் திரு அன்னா அவர்களின் போராட்டத்திற்க்கு மனப்பூர்வமான ஆதரவினை தெரிவித்துகொள்கிறது! சொந்தங்கள் அனைவரும் நிச்சயம் தங்களது மேலான ஆதரவினை அளிப்பதோடில்லாமல் உஙக்ளது கருத்துக்களையும் உலகுகிற்க்கு தெரியபடுத்துங்கள்!!

Comments

  1. மிஸ்டர் பிரதமர்!! உஙகளுக்கு நாட்டின் மக்கள் கேட்கும் கேள்விகள் கேட்டிருக்குமென்று நம்புகிறேன்! இல்லையெனில் இதோ உங்கள் டர்பனுக்குள் அனேகமாக 5 அல்லது 6 வருடமாக மக்களின் மனசாட்சிகளின் குரல்கள் எட்டாதவாறு இழுத்து கட்டப்பட்டிருக்கும் காதினை திறந்து வைத்து கேளுங்கள்!

    1. அன்னா ஹசாரே வின் போராட்டத்தால் யாராது பாதிக்கப்பட்டவர்களா?

    2. சில முக்கியமான ரகசிய காப்புபிரமாணங்கள் எடுத்துகொண்டுதான் பாராளுமன்ற உறுப்பினர் பதவியினை ஏற்க்கிறார்கள் அவர்கள் அனைவரும் அதை மீறாமல் கடைபிடித்துண்டா?!

    3. ஜனநாயக முறையில் அஹிம்சை வழியில் போராட இந்திய குடிமகனுக்கும் உரிமையுண்டென்று அனைத்து சட்டஙக்ளும் சொல்கிறது!!

    4. நெஞ்சை தொட்டுசொல்லுஙக்ள் கல்மாடி, ராஜா, ஆதர்ஸ் ஊழல், ஷீலா தீட்தித் போன்றோர்கள் செய்த ஊழல்கள் உஙக்ளுக்கு தெரியாமலா நடந்தது?!

    மதிகெட்டு கிடக்கும் பிரனாப், சோனிய, ராகுல், கபில் சிபில், சிதம்பரம், அம்பிகா சோனி இவர்கள் மட்டுமே இந்திய பேரரசல்ல கொஞ்சம் காதுகொடுத்தும் கேளுஙகள் அனைத்து மாநிலங்களிலும் ஊழலுக்கெதிரான குரல்கள் ஒழிக்கத்தொடங்கிவிட்டது! இனியாவது திருத்திகொள்ளுங்கள் மக்கள் நம்பிக்கையோடுதான் உம்மை மீண்டும் பதவியில் அமர்த்தினார்கள் அவர்களை எல்லாம் முட்டாள் என எண்ண வேண்டாம்!

    ReplyDelete

Post a Comment

உங்களின் கருத்துக்கள் எனக்கு ஊக்கமளிக்கும்

Popular posts from this blog

ஒளவையாரின் ஆத்திச்சூடி

1. அறம் செய விரும்பு எப்பொழுதும் நல்ல காரியங்களை மட்டுமே செய்வதற்கு ஆசைப்பட வேண்டும். மறந்தும் மனதால்கூட மற்றவர்களுக்கு கெடுதல் தரும் விஷயங்களைப் பற்றி நினைக்கக் கூடாது. 2. ஆறுவது சினம் கோபம் கொள்ளக் கூடாது. கோபத்தைத் தணிக்க வேண்டும். கோபத்தைக் குறைக்க வேண்டும். கோபம் வரும்போது பேச்சைக் குறைத்துக்கொள்ள வேண்டும். அப்போது எடுக்கும் எந்த முடிவும் சரியாக இருக்காது. கோபம் குறைந்த பிறகு ஆற அமர யோசித்து எடுக்கும் முடிவே சரியாக இருக்கும். எனவே கோபத்தைக் குறைத்துக் கொள்வது சாலச் சிறந்தது. கோபம் கொள்ளாமல் இருப்பது அதைவிட சிறப்பாக இருக்கும்.   3. இயல்வது கரவேல் நம்மால் இயன்றதை ஒளிக்காமல் மறைக்காமல் செய்ய வேண்டும். செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து விட்ட பிறகு அதை ஏன் மறைக்க வேண்டும்? அது மட்டுமல்ல. செய்ய நினப்பதை உடனே செய்துவிட வேண்டும். அதை ஒத்திப் போட்டால் பிறகு அதை செய்வதற்கு வாய்ப்பு இல்லாமல் போய்விடக் கூடும். எனவே நம்மால் முடிந்ததை உடனடியாக செய்து விட வேண்டும். அதையும் யாருக்கும் தெரியாமல் மறைக்காமல் செய்து விட வேண்டும். 4. ஈவது விலக்கேல் பிறருக்கு உதவி செய்வதைத்

பூம்புகார் நகரின் சிறப்பு

      தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தொடர்பான செய்திகள், தமிழ்நாட்டில் முறையாக அறிவிக்கப்படவில்லை. 1993 ஆம் ஆண்டில், இந்தியக் கடல் ஆய்வு நிறுவனம் (கோவா) மேற்கொண்ட முதல்கட்ட ஆய்வுகளிலேயே, பூம்புகார் நகரின் சிறப்பு வெளிப்பட்டது. இந்திய அரசின் நிறுவனங்களில் பணியாற்றும் சில தமிழ்ப் பகைவர்களால், இந்த ஆய்வுகள் நிறுத்தப்பட்டன. பணப் பற்றாற்குறை என்று பொய் சொல்லப்பட்டது. 1990-களில், குசராத்தில் உள்ள த ுவாரகையை அகழ்வாய்வு செய்ய, இந்திய அரசு பல கோடிகளைச் செலவிட்டது. அப்போதெல்லாம் பற்றாக்குறை பற்றிய பேச்சு எழவில்லை. துவாரகையில் எதிர்பார்த்த சான்றுகள் கிடைக்கவில்லை. சிந்துவெளிக்கு முந்திய நகரம் துவாரகை (கண்ணன் வாழ்ந்திருந்ததாகச் சொல்லப்படும் நகரம்) என அறிவிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் வெற்றி பெறவில்லை. இந்நிலையில் பூம்புகாரின் ஆய்வுகள் தமிழர்களின் தொன்மையை வெளிப்படுத்தி விடும் என்று சிலர் கருதியதின் விளைவாகவே, ஆய்வுப் பணிகள் நிறுத்தப்பட்டன. தமிழகத்தில் ஆய்வு செய்து எடுக்கப்பட்ட படங்கள் தமிழகத்தில் வெளியிடப் படவில்லை. மாறாக, பெங்களுரில் ஒருநாள் மட்டும் கண்காட்சியில் காட்டப்பட்டது

தொண்டைமானாறு:

தொண்டைமானாறு என்ற பெயரை கேட்டதும் யாழ்பாண குடாநாட்டின் வடகரையில் தொண்டைமானாறு என்ற ஊரும், ஊரின் தென்கோடியில் உள்ள செல்வச்சந்நிதி என்ற இனிய பெயரை உடைய முருகன் ஆலயமும் இந்த இடங்களைத் தெரிந்த ஒருவரின் மனக்கண்முன் தோன்றும். தொண்டைமானாறு என்னும் இவ்விடத்திற்கு பெயர் வரக்காரணம் , தொண்டைமான் மன்னர் ஒருவரின் ஆட்சியின் கீழ் இவ்விடம் இருந்ததே காரணம். இங்கே வந்த தொண்டைமான் அரசன் யார் ?அவன் தமிழ்நாட்டில் எந்த இடத்தில் இருந்து வந்தான் ? எப்போது இங்கு வந்தான் ? வந்த தொண்டைமான் அரசன் என்ன செய்தான் ? போன்ற பல கேள்விகள் நமக்கு எழும். இதற்கான  பதிலை இலங்கை வரலாற்று ஆசிரியர்களால் ஆராய்ந்து எழுதப்பட்ட "தொண்டைமானாரும்  செல்வச்சநிதியும்" என்னும் நூலில் உள்ள செய்தியை உங்களுக்காக இங்கு பகிர்கிறேன். நூல் : தொண்டைமானாரும் செல்வச்சநிதியும் ஆக்கியோன் : சே.நாகலிங்கம் வெளியீடு :  வல்வை வரலாற்று ஆவண காப்பகம் கெனடா தாய்நாட்டுத்  தமிழர்களின் வரலாற்றை பார்க்கும் போது, அங்கே கிபி இரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் காஞ்சிபுரத்தை தலைநகரமாக கொண்டு ஆட்சி செய்த தொண்டைமான் இளந்திரையனும் அவனை தொடர்ந்து , தம