Skip to main content

அரசு கம்பிவட நிறுவனத்தினை (Cables Services) விரைவாக நடைமுறைடுத்துவதில் அரசிற்க்குள்ள‌ ஆர்வமும் இதிலும்..

அரசு கம்பிவட நிறுவனத்தினை (Cables Services) விரைவாக நடைமுறைடுத்துவதில் அரசிற்க்குள்ள‌ ஆர்வமும் அவசரம்மும் சமச்சீர்கல்வி சம்பந்தமான விசயங்களில் காட்டலாமே! பாடசாலைகள் திறந்து மேற்படி இரண்டுமாதகாலம் முடிந்துவிட்டது இன்னும் மாணவர்களுக்கு படிக்க புத்தங்கள் இல்லாமல் அவதிபட்டுகொண்டிருக்கிறார்களே! அவர்களது புலம்பல் ஆட்சியாளர்களின் காதுகளுக்கு எட்டவில்லையா?

இந்த ஆட்சியிலாவது நமது துன்பங்கள் துயரங்கள் துடைக்கப்படும் என்று நம்பிதான் மக்களும் ஒவ்வொரு முறையும் வாக்களித்து ஒரு மாற்று ஆட்சியினை அமைக்க உதவுகிறார்கள் ஆனால் ஆட்சியாளர்களே வெறும் வெற்று அறிக்கைகளை நிறைவேற்றும் செய்வதில் உள்ள ஆர்வமும் அவசரமும் மாணவரக்ளின் எதிர்காலத்தினை நிர்ணயிக்கும் கல்வியில் காட்டாமல் இருப்பதன் மர்மம் என்ன‌?! தொடர்ந்து மெளணம் ஏன்? மாணவர்கள் என்ன பிழை செய்தார்கள்?! அவர்கள் ஏன் துன்பபடவேண்டும்?!

எதிர்கட்சிகளின் மேலுள்ள காழ்ப்புணர்ச்சியால் அவர்கள் செய்த அத்துனையும் மாற்றிவிட்டீர்கள் அது உங்கள் விருப்பம். நாட்டுமக்களிலுருந்து மாணவர்கள், நடுநிலையாளர்கள் ஏன் உங்களது கூட்டணி கட்சியினர் சிலர்கூட எடுத்துகூறியும், சுட்டிகாட்டியும் மற்றும் வேண்டிகொண்டும்கூட‌ இந்த சமச்சீர்கல்வி திட்டத்தில் மட்டும் வரட்டு கவுரவம் பார்க்கிறீர்கள்?! இது எந்த விதத்தில் நியாயமாக இருக்கமுடியும்?!

அட அனைத்துதரப்பு எண்ணஙக்ளையும் விடுஙக்ள், நமது உயர் மற்றும் உச்ச நீதிமன்றங்கள் சிறிதுகூட காலம்தாழ்த்தாமல் சமச்சீர்கல்வியினை அமுல்படுத்தகூறி ஆணைபிறப்பித்தபிறகும் அமல்படுத்த மறுக்கிறீகளே? இது எம்மைபோன்ற பாமரமக்களுக்கு இன்னும் விளங்கவேயில்லை?! மக்கள் எத்தனை நம்பிக்கையோடு உங்களுக்கு வாக்களித்தார்கள்! அவர்கள் பிள்ளைகளின் எதிர்கால நன்மையையினை முன்னிட்டு சிறிது மனமிறங்ககூடாதா?!

என்று திறக்கும் ஆட்சியாளர்களின் மனசாட்சி?!

Comments

  1. சிங்கத்திடம் தப்பி, புலி வாயில் மாட்டிய நிலை தான் தமிழர்கள் நிலை.

    ReplyDelete
  2. தாங்கள் கூறுவது சரியே, அம்மாவிற்கு மாணவர்கள் மேல் அக்கரை இல்லை என்பதையே காட்டுகிறது. தான் சொல்வது படிதான் நடக்கவேண்டும் என்பது அம்மாவின்
    குணம். ஐந்தாண்டுகள் ஆட்சியை தமிழக மக்கள் எப்படி தாக்குபிடிப்பார்கள் என்றுதான் தெரியவில்லை.

    ReplyDelete
  3. மிக்க நன்றி ஆனந்த் மற்றும் அசோக்!

    ReplyDelete

Post a Comment

உங்களின் கருத்துக்கள் எனக்கு ஊக்கமளிக்கும்

Popular posts from this blog

தமிழன் என்று சொல்லுவோம் தலை நிமிர்ந்து நிற்போம் தமிழை தலை நிமிர்ந்து நிற்க செய்வோம்!!

  துப்பாக்கி,பீரங்கி இல்லாமல் வெறும் வாளும், வில்லும் கொண்டு இமயம் முதல் இன்றைய இந்தோனேசியாவான சுமத்திரை வரை கி.பி 1000 -ல் ஆண்ட ராஜராஜ சோழனையும், திறம் மிகுந்தநெடுஞ்செழியனையும், கரிகாலனையும் சொல்லி வளர்க்காமல் ஒன்றுக்கும் உதவாத முதலாம், இரண்டாம் உலக போர்களை அல்லவா சொல்லி வளர்த்தீர்கள். தமிழனின் சிறப்பை சொல்லி தமிழன் என்று பெருமை கொள்ளும்படி செய்து, மேற்கத்தியர்கள் 5000 ஆண்டுகளுக்கு முன் மொழியற்று காட்டுவாசிகளாய் இருந்த போதே இங்கே கலாச்சாரம் தோன்றி சிலப்பதிகாரமும், குறளும் இயற்ற பட்டு விட்டன என்பதை சொல்லி வளர்த்திருந்தால் இன்று ஏன் இளைஞன் மேற்கு மோகம் கொண்டு அலைகிறான்? இந்த கொடுமைகளுக்கு ஆங்கிலம் படிக்காவிட்டால் இன்றைய சூழ்நிலையில் எந்த துறையிலும் மின்ன முடியாது என்று பதில் வாதம் வைக்கிறார்கள்.இப்படி ஆதாயத்தை முன்னிலைபடுத்தி பற்றையும், பாசத்தையும் புறக்கணிப்பது என்ன நியாயம்?.இந்த பாணியில் ஆதாய நோக்கில் வளரும் பிள்ளைகள் கடைசியில் உங்களை அதே வழியில் பாசத்தை மறந்து முதியோர் இல்லங்களில் தள்ளுகிறார்கள். தாய் மொழியை மதிக்காதவன் எப்படி தாயை மதிப்பான். டையிலும், ஷூவிலும் நீங்கள் ஆரம்...

ஒளவையாரின் ஆத்திச்சூடி

1. அறம் செய விரும்பு எப்பொழுதும் நல்ல காரியங்களை மட்டுமே செய்வதற்கு ஆசைப்பட வேண்டும். மறந்தும் மனதால்கூட மற்றவர்களுக்கு கெடுதல் தரும் விஷயங்களைப் பற்றி நினைக்கக் கூடாது. 2. ஆறுவது சினம் கோபம் கொள்ளக் கூடாது. கோபத்தைத் தணிக்க வேண்டும். கோபத்தைக் குறைக்க வேண்டும். கோபம் வரும்போது பேச்சைக் குறைத்துக்கொள்ள வேண்டும். அப்போது எடுக்கும் எந்த முடிவும் சரியாக இருக்காது. கோபம் குறைந்த பிறகு ஆற அமர யோசித்து எடுக்கும் முடிவே சரியாக இருக்கும். எனவே கோபத்தைக் குறைத்துக் கொள்வது சாலச் சிறந்தது. கோபம் கொள்ளாமல் இருப்பது அதைவிட சிறப்பாக இருக்கும்.   3. இயல்வது கரவேல் நம்மால் இயன்றதை ஒளிக்காமல் மறைக்காமல் செய்ய வேண்டும். செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து விட்ட பிறகு அதை ஏன் மறைக்க வேண்டும்? அது மட்டுமல்ல. செய்ய நினப்பதை உடனே செய்துவிட வேண்டும். அதை ஒத்திப் போட்டால் பிறகு அதை செய்வதற்கு வாய்ப்பு இல்லாமல் போய்விடக் கூடும். எனவே நம்மால் முடிந்ததை உடனடியாக செய்து விட வேண்டும். அதையும் யாருக்கும் தெரியாமல் மறைக்காமல் செய்து விட வேண்டும். 4. ஈவது விலக்கேல் பிறருக்கு உதவி செய்வ...

பூம்புகார் நகரின் சிறப்பு

      தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தொடர்பான செய்திகள், தமிழ்நாட்டில் முறையாக அறிவிக்கப்படவில்லை. 1993 ஆம் ஆண்டில், இந்தியக் கடல் ஆய்வு நிறுவனம் (கோவா) மேற்கொண்ட முதல்கட்ட ஆய்வுகளிலேயே, பூம்புகார் நகரின் சிறப்பு வெளிப்பட்டது. இந்திய அரசின் நிறுவனங்களில் பணியாற்றும் சில தமிழ்ப் பகைவர்களால், இந்த ஆய்வுகள் நிறுத்தப்பட்டன. பணப் பற்றாற்குறை என்று பொய் சொல்லப்பட்டது. 1990-களில், குசராத்தில் உள்ள த ுவாரகையை அகழ்வாய்வு செய்ய, இந்திய அரசு பல கோடிகளைச் செலவிட்டது. அப்போதெல்லாம் பற்றாக்குறை பற்றிய பேச்சு எழவில்லை. துவாரகையில் எதிர்பார்த்த சான்றுகள் கிடைக்கவில்லை. சிந்துவெளிக்கு முந்திய நகரம் துவாரகை (கண்ணன் வாழ்ந்திருந்ததாகச் சொல்லப்படும் நகரம்) என அறிவிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் வெற்றி பெறவில்லை. இந்நிலையில் பூம்புகாரின் ஆய்வுகள் தமிழர்களின் தொன்மையை வெளிப்படுத்தி விடும் என்று சிலர் கருதியதின் விளைவாகவே, ஆய்வுப் பணிகள் நிறுத்தப்பட்டன. தமிழகத்தில் ஆய்வு செய்து எடுக்கப்பட்ட படங்கள் தமிழகத்தில் வெளியிடப் படவில்லை. மாறாக, பெங்களுரில் ஒருநாள் மட்டும் கண்காட்சியில்...